எங்கும் எதிலும் இயற்கை!

எங்கும் எதிலும் இயற்கை!
Updated on
1 min read

சென்னை புத்தகக் காட் சிக்கு வருவோரைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஓர் அரங்கு ‘இயல்வாகை’. இயற்கை வாழ்வைக் கொண்டாடும் அரங்கு இது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புத் தகங்கள் அனைத்தும் இங்கே இருக்கின்றன. இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, இயற்கை மருத்து வம் சார்ந்த விஷயங்களைப் பேசும் புத்தகங்கள் இந்த அரங்கில் குவிந்திருக்கின்றன. வெறும் புத்தகங்களோடு மட்டும் அல்லாமல், அரங்கும் இயற் கையைப் பேசும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அரங்கின் முன் பகுதியில் நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த வேப்ப மரம் வாசகர்களை வரவேற்கிறது. புத்தகக் காட்சியின் பந்தலில் இயற்கையாகவே வளர்ந்த மரம் இது. அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு முழுவதுமே இயற்கையாகக் காணப்பட வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in