Published : 02 May 2015 10:45 AM
Last Updated : 02 May 2015 10:45 AM

ஒளிக்கப்பட்ட தியாகங்கள் !

இராஜராஜ சோழனால் கி.பி.1004-ம் ஆண்டு கட்டத் துவங்கி, கி.பி.1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, தமிழர்களின் தனிப்பெருமையாய் இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் பின்னணியை விமர்சனபூர்வமாக ஆராய்கிறது இந்நூல். கோயில் கட்டிய மன்னன் பெயர், கோயிலுக்கு நிதி உதவி செய்த அரசன் வீட்டுப் பெண்கள் உட்பட நிதியாளர்களின் பெயர்களையெல்லாம் பொறித்த அரசன், கோயில் கட்டிய தொழிலாளர்களின் பெயர்களை எங்கும் பொறிக்காதது ஏன்? இது போன்ற பல கேள்விகளை ஆசிரியர் எழுப்புகிறார். மாபெரும் அதிசயங்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் தனிமனிதர்களின் தியாகங்களையும், மறுக்கப்பட்ட நீதியையும் பற்றிய கவலைகளை இந்தக் குறுஆய்வு நூல் நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.



இராஜராஜம்
(சமூகவியல் நோக்கில் ராஜராஜ சோழன் வரலாறு)
வெ.ஜீவகுமார்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-98.
விலை: ரூ.60/
தொடர்புக்கு: 044-26258410


- மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x