Published : 19 Aug 2017 09:46 AM
Last Updated : 19 Aug 2017 09:46 AM

பிறமொழி நூலறிமுகம்: கண்ணில் தென்படாத நரகம்

கொ

ல்கத்தாவின் மக்கள்தொகையில் 25 சதவீத மாக உள்ள முஸ்லிம்கள் எவ்வித வசதியும் இல்லாத பஸ்தி எனும் குடிசைப் பகுதிகளில் தங்கள் அன்றாட வாழ்வுக்காகப் போராடிவரும் நிலையை ஆய்வாளர் ஜெரெமி சீப்ரூக்கும், பத்திரிகையாளர் இம்ரான் அகமத் சித்திகியும் இந்நூலில் சித்தரித்துள்ளனர்.

பிஹார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து குடியேறிய உருது பேசும் முஸ்லிம்களில் பெரும்பான்மை யோர் கப்பற்தளங்களிலும், மற்ற வணிகப் பகுதிகளிலும் கூலித் தொழிலாளர்களாக, கைரிக்‌ஷா ஓட்டிகளாக, குப்பை பொறுக்குபவர்களாக, சிறுகைவினைஞர்களாக, போதிய படிப்பறிவின்றி, எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றிக் காலம் காலமாக வாழ்ந்துவருவதை இந்நூல் ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

முஸ்லிம் என்ற சொல்லே சந்தேகத்துக்கு உட்பட்டதாக, வெறுப்புக்கு ஆட்பட்டதாக, புறக்கணிப்புக்கு இலக்காக மாறியுள்ள இன்றைய ஒற்றை ஆதிக்கச் சமூகப் பார்வையின் பின்னணியில் பார்க்கும்போது, அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே அலைபாயும் இந்த முஸ்லிம் மக்களின் நரக வாழ்க்கை இடைவெளியின்றித் தொடர்வதைப் பேட்டிகளின் மூலம்

தெரிவிக்கிறது இந்நூல்.

- வீ.பா. கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x