Published : 29 Dec 2023 04:00 AM
Last Updated : 29 Dec 2023 04:00 AM

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் @ கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அருகே ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் சார்பில் 6-வது ஆண்டாக அன்னதானம் வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் மிலாது நபி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜைப் பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

அதன்படி, 6-வது ஆண்டாக கொட்டாவூர் கிராமத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் நடந்த சிறப்பு பூஜையின் போது, வழிபாட்டுக்குத் தேவையான பூஜைப் பொருட்களை அமைப்பின் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான அஸ்லாம் ரஹ்மான் ஷெரிப் தலைமையில் இஸ்லாமியர்கள் வழங்கினர்.

மேலும், ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானத்தைப் பரிமாறினர். அமைப்பின் நிர்வாகிகள் ரியாஸ், அஷ்ரப், ஜாபர், ஜெலில், முனீர், சுபேர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x