“வாக்குரிமையை பறிக்க அனுமதிக்க மாட்டோம்” - மே.வங்க முதல்வர் மம்தா உறுதி

மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி

Updated on
1 min read

கொல்கத்தா: வாக்​குரிமையைப் பறிக்க பாஜகவை அனு​ம​திக்க மாட்​டோம் என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்​கத்​தா​வின் ‘ரெட் ரோடு’ பகு​தி​யில் நேற்று ரம்​ஜான் தொழுகைக்​குப் பிறகு, அங்கு கூடி​யிருந்த மக்​களிடையே மம்தா பானர்ஜி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் (எஸ்​ஐஆர்) பணி மூலம் வாக்​காளர்​களின் பெயர்​கள் பெரு​மள​வில் நீக்​கப்​பட்​டுள்​ளன. இது, தேர்​தல் நடை​முறை​யில் செல்​வாக்கு செலுத்​து​வதற்​கான பரந்த முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாகும்.

எஸ்​ஐஆர் மூலம் பாஜக உங்​கள் வாக்​குரிமையை பறிக்க நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம். ஜனநாயகத்​தை​யும் ஒவ்​வொரு குடிமக​னின் உரிமை​களை​யும் பாது​காக்க நாங்​கள் இறு​திவரை போராடு​வோம்.

மேற்கு வங்​கம் ஒற்​றுமையை நம்​பு​கிறது. இந்​துக்​கள், முஸ்​லிம்​கள், சீக்​கியர்​கள், கிறிஸ்​தவர்​கள் என அனை​வரும் இணைந்து வாழ்​கின்​றனர். இந்த சமூக நல்​லிணக்​கக் கட்​டமைப்பை சிதைக்க நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம். இவ்​வாறு மம்தா பேசி​னார். மொத்​தம் 294 உறுப்​பினர்​களை கொண்ட மே.வங்க பேர​வைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்​டங்களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது.

<div class="paragraphs"><p>மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி</p></div>
4,000 கி.மீ தூர இலக்கை தாக்கும் ஏவுகணையை வீசிய ஈரான்: அமெரிக்கா, இங்கிலாந்து அதிர்ச்சி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in