வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்: இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஐஐடி கல்வி நிறு​வனத்​தின் 57-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று மாணவ, மாண​வியருக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். 3,000-க்​கும் மேற்​பட்​டோருக்கு இளநிலை பொறி​யியல் பட்​டங்​களும், 587 பேருக்கு பிஎச்டி பட்​டங்​களும் வழங்​கப்​பட்​டன.

இவ்​விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: அனைத்து துறை​களி​லும் சுய​சார்பை எட்ட இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம். இந்த லட்​சி​யத்தை எட்ட இளம் தலை​முறை​யினர் உறு​துணை​யாக இருப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன். அவர்​கள் மீது நான் மிகுந்த நம்​பிக்கை வைத்​திருக்​கிறேன்.

இளைஞர்​களின் நலனுக்​காக பல்​வேறு சீர்​திருத்​தங்​கள் அமல் செய்​யப்​பட்டு உள்​ளன. விண்​வெளி துறை தனி​யாருக்கு திறந்​து​விடப்​பட்டு இருக்​கிறது. இந்​திய இளைஞர்​கள் உரு​வாக்​கிய ராக்​கெட் அண்​மை​யில் வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தப்​பட்​டது. செமி கண்​டக்​டர், ட்ரோன் உற்​பத்​தி, செயற்கை நுண்​ணறி​வு, டேட்டா சென்​டர், எரிசக்​தி, குவான்​டம் கம்ப்​யூட்​டிங், மருத்​து​வம், விவ​சா​யம் உட்பட பல்​வேறு துறை​களில் இந்​திய இளைஞர்​கள் பல்​வேறு சாதனை​களை படைத்து வரு​கின்​றனர். இளம் தலை​முறை​யின​ரால் நமது நாட்​டில் ஸ்டார்ட்​அப் புரட்சி நடை​பெற்று கொண்​டிருக்​கிறது.

இந்​திய இளைஞர்​கள் புதிய ஆராய்ச்​சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்​டும். இதற்​காக தேசிய ஆராய்ச்சி அறக்​கட்​டளை உரு​வாக்​கப்​பட்டு உள்​ளது. மத்​திய அரசு சார்​பில் ஆராய்ச்சி துறைக்​காக ஒரு லட்​சம் கோடி ரூபாய் ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு இருக்​கிறது.

ஒவ்​வொரு தலை​முறை​யினருக்​கும் தனிப்​பட்ட கடமை​கள் உள்ளன. நமது முன்​னோர்​கள் நாட்​டின் விடு​தலைக்​காக பாடுபட்டார்​கள். இன்​றைய இளம் தலை​முறை​யினருக்கு மிக முக்கிய​மான கடமை இருக்​கிறது.

வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க வேண்​டியது உங்​களின் கடமை ஆகும். நீங்​கள் 30 வயதை எட்​டும்​போது வாழ்​வின் முக்​கிய​மான கட்​டத்​தில் இருப்​பீர்​கள். அப்​போது வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க உங்​களின் ஆக்​கப்​பூர்​வ​மான பங்​களிப்பை வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

<div class="paragraphs"><p>பிரதமர் நரேந்திர மோடி</p></div>
மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in