உ.பி. நீதிபதியிடம் ரூ.24 லட்சம் மோசடி

உ.பி. நீதிபதியிடம் ரூ.24 லட்சம் மோசடி
Updated on
1 min read

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் 'அல் ஃபஹத் டூரிசம் கம்​பெனி' என்ற ஒரு நிறு​வனம் உள்ளது. இந்த நிறு​வனத்​தின் சார்​பில் ஹஜ் யாத்​திரைக்கு ஏற்​பாடு செய்​வ​தாக கூறி நீதிபதி ஒரு​வரிடம் ஆன்​லைனில் ரூ.23.99 லட்​சம் வசூலித்து மோசடி செய்யப்பட்டது.

புகாரின் அடிப்படையில் போலீ​ஸார் விசா​ரணை​ நடத்தி அந்த நிறு​வனத்தை சேர்ந்த உசாமா ரஷீ​தி, இஜாஸ் அகமது ஆகிய இரு​வரை கைது செய்​தனர். நிறு​வனத்​தின் இயக்​குநர் ஆமிர் ரஷீதி உள்​ளிட்ட இரு​வரை தேடி வரு​கின்​றனர்.

இந்த முறை​கேட்​டில் 4 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. பணத்தை மீட்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு உள்​ள​தாக​ போலீ​ஸார் தெரி​வித்​தனர்​.

உ.பி. நீதிபதியிடம் ரூ.24 லட்சம் மோசடி
ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மும்பையில் என்சிபி அதிகாரிகள் நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in