ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மும்பையில் என்சிபி அதிகாரிகள் நடவடிக்கை

ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மும்பையில் என்சிபி அதிகாரிகள் நடவடிக்கை
Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் ரூ.1,745 கோடி மதிப்​பிலான கோகைன் போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்டு உள்​ளது.

தென் அமெரிக்​கா, ஆப்​பிரிக்க நாடு​கள் மற்​றும் ஐக்​கிய அரபு அமீரகம், துருக்​கி, பிரான்ஸ் உள்​ளிட்ட நாடு​களில் இருந்து இந்தியா​வுக்​குப் போதைப் பொருட்​கள் கடத்​தப்​படு​வது அதி​கரித்து வரு​கின்​றன. பொது​வாக சரக்​குக் கப்​பல், சரக்கு விமானங்​கள் மூலம் போதைப் பொருள் மும்​பைக்​குள் கடத்​தப்​படு​கிறது.

இந்​தச் சூழலில் போதைப் பொருள் தடுப்​புப் பிரிவு அதி​காரி​கள், மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பை​யில் 349 கிலோ கோகைன் போதைப் பொருளைப் பறி​முதல் செய்​துள்​ளனர். இதன் சர்​வ​தேச மதிப்பு ரூ.1,745 கோடி. இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்​சிபி) அதி​காரி​கள், மும்​பை​யில் 349 கிலோ கோகைன் பறி​முதல் செய்து உள்​ளனர். சிறிய அளவி​லான போதைப் பொருள் கடத்​தல்​களைத் தொடர்ந்து கண்​காணித்து மிகப்​பெரிய நெட்​வொர்க் கண்​டறியப்​பட்டு உள்​ளது. சர்​வ​தேச போதைப் பொருள் கடத்​தலைக் கண்​டு​பிடித்த என்​சிபி குழு​வைப் பாராட்​டு​கிறேன்" என்று தெரி​வித்​துள்​ளார்.

மும்பை நிழல் உலக தாதா​வாக இருந்த தாவூத் இப்​ராகிம் தற்​போது பாகிஸ்​தானில் தலைமறை​வாக உள்​ளார். அவரது நெருங்​கிய கூட்​டாளி சலீம் டோலா அண்​மை​யில் துருக்​கி​யில் கைது செய்​யப்​பட்​டார். அவர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்டு உள்​ளார். அவரது கைதைத் தொடர்ந்து மும்​பை​யில் மிகப்​பெரிய அளவில் கோகைன் கைப்​பற்​றப்​பட்டு இருப்​ப​தாக மகா​ராஷ்டிர போலீஸ் வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதுகுறித்து என்​சிபி அதி​காரி​கள் கூறிய​தாவது: மும்​பை​யின் பல்​வேறு பகு​தி​களுக்கு கோகைன் போதைப் பொருளை கடத்​திச் செல்​வ​தாக ரகசிய தகவல் கிடைத்​தது. இதன்​பேரில், நவி மும்​பை​யின் கலம்​போலி பகு​தி​யில் வாகன சோதனை நடத்​தப்​பட்​டது. அப்​போது ஒரு சரக்கு வாக​னத்தை நிறுத்தி சோதனை செய்​தோம். அதில் இருந்து 136 மூட்​டைகளில் கோகைன் கைப்​பற்​றப்​பட்​டது. இதே​போல, தானே மாவட்​டம் பிவண்​டி​யில் உள்ள கிடங்​கில் 213 மூட்​டைகளில் பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்த கோகைன் போதைப் பொருள் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

வெளி​நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​பட்ட இயந்​திரங்​களுக்​குள் கோகைன் போதைப் பொருளை மறைத்து வைத்து இந்​தி​யா​வுக்​குள் கடத்தி வந்​திருப்​பது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இந்​த சர்​வ​தேச போதைப்​ பொருள்​ கடத்தல் கும்​பலுடன்​ தொடர்​பு உடைய நபர்​களை தீவிர​மாக தேடி வரு​கிறோம்​. இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.

ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மும்பையில் என்சிபி அதிகாரிகள் நடவடிக்கை
மே.வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in