வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களை நம்புங்கள்: திரிணமூல் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான வாக்கு எண்​ணிக்கை நாளை நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், வாக்கு எண்​ணிக்கை மையங்​களுக்​கான மேற்​பார்​வை​யாளர்​கள் மற்​றும் உதவி​யாளர்​களாக மத்​திய அரசு மற்​றும் பொதுத்​துறை நிறுவன ஊழியர்​களைத் தேர்​தல் ஆணை​யம் நியமித்​தது. இந்த முடிவை எதிர்த்து திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் கொல்​கத்தா உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில், ‘‘மத்​திய அரசு ஊழியர்​கள் தங்​கள் கட்​சிக்கு எதி​ராக செயல்​படு​வார்​கள். எனவே, மாநில அரசு ஊழியர்​களை நியமிக்க உத்​தர​விட வேண்​டும்’’ என கூறி​யிருந்​தது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மனுவை தள்​ளு​படி செய்​தது.

வாக்கு எண்​ணிக்கை அதி​காரி​களைத் தேர்ந்​தெடுப்​பது தேர்​தல் ஆணை​யத்​தின் தனிப்​பட்ட அதி​காரம் என்​றும் மாநில அரசு ஊழியர்​களை மட்​டும்​தான் பயன்​படுத்த வேண்​டும் என்ற எந்​தக் கட்​டுப்​பாடும் சட்​டத்​தில் இல்லை என்​றும் நீதி​மன்​றம் தனது தீர்ப்​பில் தெரி​வித்​தது.

இதையடுத்​து, திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது:

மத்​திய அரசு ஊழியர்​கள் என்​றாலே தவறாக நடப்​பார்​கள் என்ற திரிண​மூல் காங்​கிரஸின் எண்​ணம் தவறானது. மத்​திய அரசு ஊழியர்​கள் மீது திரிண​மூல் காங்​கிரஸ் நம்​பிக்கை வைக்க வேண்​டும். வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் மாநில அரசு ஊழியர்​களும் இருப்​பார்​கள். எனவே அச்​சப்​படத் தேவை​யில்​லை. தேர்​தல் ஆணை​யம் யாரை பணி​யமர்த்த வேண்​டும் என்​பது அதன் தனிப்​பட்ட அதி​காரம். இதில் சட்​ட​விரோதம் ஏது​மில்​லை. இவ்​வாறு தீர்ப்​பளித்த உச்ச நீதி​மன்​றம், திரிண​மூல்​ காங்​கிரஸ்​ மனுவை முடித்​து வைத்​தது.

<div class="paragraphs"><p>உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம்</p></div>
கேரளாவில் மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in