கேரளாவில் மக்களின் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கிணற்றில் இறங்கி தூர் வாரிய பஞ்சாயத்து பெண் உறுப்பினர்

பஞ்​சா​யத்து உறுப்பினர் மரீனா சனீஷ்

பஞ்​சா​யத்து உறுப்பினர் மரீனா சனீஷ்

Updated on
1 min read

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்​டம் உப்​புத்​தரா கிராம பஞ்​சா​யத்து உறுப்​பினர் மரீனா சனீஷ். உப்​புத்​தரா கிராம மக்​கள் கோடை காலங்​களில் குடிநீருக்​காக பல மைல் தூரம் செல்​ல​ வேண்​டிய நிலை​யிருந்​தது. இதே கிராமத்​தில் பிரிட்​டிஷார் ஆட்சிக் ​காலத்​தில் தோண்​டப்​பட்ட கிணறு ஒன்று இருக்​கிறது. இது நல்ல தண்​ணீர் கிணறும் கூட. ஆனால் போதிய பராமரிப்பில்லாமல் வறண்டு இருந்​தது.

இதையடுத்து இந்​தக் கிணற்றை தூர் வார மரீனா முடிவு செய்தார். இதையடுத்து கிராம மக்​கள் உதவி​யுடன் அவர் மட்​டுமே தன்னந்​தனி​யாக கிணற்​றில் இறங்கி தூர் வாரி​னார். தற்​போது இந்​தக் கிணற்​றில் குடிநீர் ஊற்று அதி​கரித்து தண்​ணீர் வரத்​தொடங்கியுள்​ளது.

இதுகுறித்து மரினா சனீஷ் கூறும்​போது, “இந்த 15 அடி ஆழமுள்ள கிணற்​றில் வண்​டல் மண்​ணும், சேறும் நிறைந்​திருந்​தது. இதையடுத்து கோடை காலத்​துக்கு முன்​ன​தாக தூர் வார முடிவு செய்​தோம். இதற்கு முன்பு இதை 100-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் இந்​தக் கிணற்றை பயன்​படுத்தி வந்​தனர்.

முதலில் யாரும் கிணற்​றில் இறங்க முன்​வர​வில்​லை. இதையடுத்து நானே இறங்கி சுத்​தம் செய்​தேன். அதில் இருந்த சேறு, வண்​டல் மண் ஆகிய​வற்றை தூர் வாரி சுத்​தப்​படுத்​தினேன். இயந்​திரங்​கள் உதவி​யுடன் சுமார் 4 மணி நேரத்​தில் கிணறு சுத்​தம் செய்​யப்​பட்​டது. தற்​போது கிணற்​றில் நல்ல தண்​ணீர் ஊற்​றெடுக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இதையடுத்து மக்​கள் பயன்​படுத்​தும் அளவுக்கு கிணற்​றில் தண்​ணீர் மட்​டம் அதி​கரித்​துள்​ளது. இதனால் இந்​தப் பகுதி மக்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்” என்​றார்.

இதுதொடர்​பான வீடியோக்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>பஞ்​சா​யத்து உறுப்பினர் மரீனா சனீஷ்</p></div>
ஜபல்பூர் படகு விபத்து வீடியோவில் அதிர்ச்சி தகவல்: லைப் ஜாக்கெட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in