பெங்களூரு ஓட்டலில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் கைது

பெங்களூரு ஓட்டலில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: கேரளாவை சேர்ந்த 50 வயது தொழில​திபர், பெங்களூருவில் உள்ள மடி​வாளா​வில் தனி​யார் விடு​தி​யில் தங்​கி​யிருந்​தார்.

நேற்று முன்​தினம் அங்கு வந்த சிஐடி போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் மகேஷ் கனக‌கிரி, அறையை சோதனை நடத்த வேண்​டும் என கூறி​யுள்​ளார்.

மேலும் தனது நண்​பர்​கள் வசந்த் குமார், குபேந்​திர ரெட்டி ஆகியோ​ருடன் சேர்ந்து தொழில​திபரை தாக்​கி, அவரிடம் இருந்து ரூ.20 லட்​சத்தை பறித்​துச் சென்​றுள்​ளார்.

இதையடுத்​து, மடி​வாளா காவல் நிலை​யத்​தில் தொழில​திபர் புகார் அளித்​தார். தனி​யார் விடு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா பதிவு​களை ஆராய்ந்த போலீ​ஸார், சிஐடி போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் மகேஷ் கனக‌கிரியை அடை​யாளம் கண்​டனர்.

பின்​னர் அவரது செல்​போன் பயன்​பாட்டை வைத்து அவரை கோரமங்​களா​வில் மடக்​கிப் பிடித்​தனர். அவரைத் தொடர்ந்து வசந்த் குமார், குபேந்​திர ரெட்டி ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர்.

இதுகுறித்து துணை ஆணை​யர் முகமது சுஜீதா கூறுகை​யில், ‘‘ரூ.20 லட்​சம் கொள்​ளை​யடித்த சிஐடி போலீஸ் இன்​ஸ்​பெக்​டர் மகேஷ் கனக‌கிரி உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

அவர்​கள் பயன்​படுத்​திய அரசு வாக​னத்​தைப் பறி​முதல் செய்​துள்​ளோம். அதுகுறித்து வி​சா​ரித்​து வரு​கிறோம்​’’ என்​றார்​.

பெங்களூரு ஓட்டலில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் கைது
மாமியார் இம்சை தாங்க முடியல கடவுளே... ரூ.20 நோட்டில் எழுதி வேண்டிய மருமகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in