டெல்லியில் சைபர் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை வழங்கிய 3 பேர் கைது

டெல்லியில் சைபர் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை வழங்கிய 3 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் மைன்​புரியைச் சேர்ந்த ஒரு​வர் சமூக ஊடகத்​தில் வந்த விளம்​பரத்​தைப் பார்த்து உலர் பழங்​களை ஆன்லைனில் ஆர்​டர் செய்​துள்​ளார்.

செயலி ஒன்​றின் மூலம் மோசடி​யாளர்​கள் அவரைத் தொடர்பு கொண்​டு, பொருளை டெலிவரி செய்ய இயல​வில்லை எனக் கூறி, அதற்​குப் பதிலாக பணத்​தைத் திருப்​பித் தரு​வ​தாக கூறினர். அவர்​களது வழி​முறை​களின்​படி செயல்​பட்ட அந்த நபர், தனது வங்​கிக் கணக்​கி​லிருந்து ரூ.47,971-ஐ இழந்​தார். இதுகுறித்து அவர் காவல் துறை​யில் புகாரளித்​தார்.

விசா​ரணை​யில், மோசடிப் பணம் டெல்லி திரிலோக்​புரியைச் சேர்ந்த சன்​னி​யின் வங்​கிக் கணக்​குக்​குச் சென்​றது தெரிய​வந்​தது. கமிஷன் ஆசை​யில் சன்னி தனது வங்​கிக் கணக்கை மோசடிப் பணத்​தைப் பெறப் பயன்​படுத்த அனு​ம​தித்​துள்​ளார். அவரிட​மிருந்து கைப்​பற்​றப்​பட்ட மொபைல் போன் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​கிறது.

இதன் அடிப்​படை​யில், காவல் துறை​யினர் 3 பேரை கைது செய்​துள்​ளனர். இவர்​கள் பயன்​படுத்​திய வெள்ளை நிற காரும் பறி​முதல் செய்​யப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட மூவரும் நீதி​மன்ற காவலில் அனுப்​பப்​பட்​டுள்​ளனர்​.

டெல்லியில் சைபர் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை வழங்கிய 3 பேர் கைது
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்தும் ஆண் குழந்தையை விரும்புவது மிகவும் துரதிருஷ்டவசமானது: மும்பை உயர் நீதிமன்றம் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in