போதைப்பொருள் கடத்த முயன்ற 7 பேர் கைது: 1,000 கிலோ பறிமுதல் செய்தது சிறப்புப் படை

போதைப்பொருள் கடத்த முயன்ற 7 பேர் கைது: 1,000 கிலோ பறிமுதல் செய்தது சிறப்புப் படை
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் போதைப்​பொருள் கடத்​தலைத் தடுக்​க​வும், அதன் பின்​னணி​யில் உள்​ளவர்​களைக் கண்​டறிய​வும் சைப​ரா​பாத் மற்​றும் மியாப்​பூர் போலீ​ஸார் இணைந்து ‘ஹைத​ரா​பாத் ஈகிள்’ என்ற சிறப்​புப் படையை அமைத்​துத் தீவிர ஆய்​வில் ஈடு​பட்​டனர்.

இந்த ஆய்​வில், ராஜஸ்​தானில் இருந்து பெங்​களூரு வழி​யாக ஹைத​ரா​பாத்​துக்கு போதைப்​பொருட்​கள் கடத்தி வரப்​படு​வது கண்​டறியப்பட்​டது.

இதையடுத்து நடத்​தப்​பட்ட சோதனை​யில் 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் இருந்து 1,031 கிலோ ஓபி​யம் (அபின்​-கருப்பு மருந்​து) மற்​றும் 25 கிராம் மெஃபெட்​ரோன் (எம்​.டி) ஆகியவை பறிமுதல் செய்​யப்​பட்​டன.

ராஜஸ்​தானை மைய​மாகக் கொண்டு இயங்​கும் இந்த கும்​பல், கூரியர் சேவை​கள், தனி​யார் பேருந்​துகள், ரயில்​கள், கார்​கள் மற்றும் இடைத்​தரகர்​கள் மூலம் போதைப்​பொருட்​களைக் கடத்தி வந்​துள்​ளது. கடந்த 2023-ம் ஆண்​டில் இருந்து இது​வரை 78 குழுக்கள் மூலம் ஹைத​ரா​பாத்​துக்கு போதைப்​பொருட்​கள் கடத்தி வரப்​பட்டு விநி​யோகிக்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது.

ராஜஸ்​தானைச் சேர்ந்த மகேந்​தர் குமாவத் என்​பவர், பெங்​களூரு வழி​யாக ஹைத​ரா​பாத்​துக்கு போதைப்​பொருட்​களை அனுப்பி வைத்​துள்​ளது விசா​ரணை​யில் அம்​பல​மாகி​யுள்​ளது.

இது தொடர்​பாக ‘எம்​.ஆர் டிராவல்​ஸ்’ தனி​யார் பேருந்து ஓட்​டுநர் ஒரு​வரை​யும் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

போதைப்பொருள் கடத்த முயன்ற 7 பேர் கைது: 1,000 கிலோ பறிமுதல் செய்தது சிறப்புப் படை
பாகிஸ்தானுக்கு ரகசியங்களை கசியவிட்ட விமானப் படை அதிகாரி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in