தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: பா.ஜ.க. நிர்​வாகி​யும் வழக்​கறிஞரு​மான அஸ்​வினி குமார் உபாத்​யாய் கடந்த 2022-ல் உச்ச நீதி​மன்​றத்​தில் இலவச அறி​விப்​புக்​களுக்கு எதி​ராக ஒரு வழக்கை தொடுத்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், மத்​திய அரசு, தேர்​தல் ஆணை​யம் மற்​றும் அரசி​யல் கட்​சிகளுக்கு நோட்​டீஸ் பிறப்பித்தது. இலவசங்​களை அறி​விப்​பது குறித்து ஆய்வு செய்ய வல்​லுநர் குழுவை அமைத்​தும் உத்​தர​விட்​டது.

அரசி​யல் கட்​சிகள் கொடுக்​கும் இலவச வாக்​குறு​தி​களைத் தடுக்க முடி​யாது என்​றும் ஆனால் இலவசங்​களை​யும் வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் குழப்பிக்கொள்​ளக்​கூ​டாது எனவும் உச்ச நீதி​மன்​றம் தெரிவித்திருந்​தது.

இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வருகிறது. இதனை விரைந்து விசா​ரிக்​கக் கோரி, மனு​தா​ரர் அஸ்​வினிகு​மார் உபாத்​யாய் உச்ச நீதி​மன்​றத்​தின் தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் அமர்வு முன்பு நேற்று முறை​யிட்​டார். “இந்த வழக்கு நீண்ட நாட்​களாக நிலு​வை​யில் இருக்​கிறது. எனவே வழக்கை விசா​ரணைக்கு பட்​டியலிட வேண்​டும். இலவசங்​கள் அறி​விப்பு குறித்து குழு அமைத்து ஆய்வு செய்​வது தொடர்​பாக எதிர்​மனுதாரர்​கள் ஒப்​புதல் தெரி​வித்​துள்​ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

அப்​போது பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் சார்​பில் ஆஜராகி​யிருந்த வழக்​கறிஞர்​கள், “இல​வசங்​கள் அறி​விப்பு தொடர்​பாக ‘குழு’ அமைத்து ஆய்வு செய்​யும் விவ​காரத்​தில் தங்​களுக்கு ஆட்​சேபம் இல்​லை” என்று தெரி​வித்​தனர்.

அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை அவசர​மாக விசா​ரிக்க மறுத்​து​விட்​டார். அவர் கூறும்​போது, “முக்​கிய​மான பல வழக்​கு​களின் விசா​ரணை நிலுவை​யில் உள்​ளன. எனவே இந்த வழக்கை வி​சா​ரிப்​பது குறித்து பின்​னர் பரிசீலிக்​கப்​படும்​” என்​று தெரிவித்​தார்​.

தேர்தல் இலவசங்களுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
“நீட் தேர்வுக்கு தினமும் 17 மணி நேரம் படித்தேன்” - முதலிடம் பிடித்த ஆரியன் குப்தா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in