வெட்​கமில்​லாத, நன்​றிகெட்ட, ஊழல் பேர்​வழிகள்: கட்​சி மாறிய 6 எம்​.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு

வெட்​கமில்​லாத, நன்​றிகெட்ட, ஊழல் பேர்​வழிகள்: கட்​சி மாறிய 6 எம்​.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு
Updated on
1 min read

மும்பை: சிவசேனா (உத்​தவ்) கட்​சி​யிலுள்ள 9 மக்​களவை எம்.பி.க்களில் 6 பேர் பிரிந்து மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்நாத் ஷிண்டே​வின் சிவசே​னா​வில் சேர​வுள்​ள​தாக தகவல்​கள் வந்​தன.

அந்த 6 பேர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு சிவசேனா (உத்​தவ்) கட்சி கடிதம் எழுதவுள்​ளது. இந்​நிலை​யில் ஏக்​நாத் ஷிண்டே கட்​சி​யில் அந்த 6 பேரும் சேர​வுள்​ள​தாக தகவல்​கள் வந்​துள்​ளது.

இதுகுறித்து மகா​ராஷ்டிர முன்​னாள் அமைச்​சரும், உத்​தவ் தாக்கரே​வின் மகனு​மான ஆதித்ய தாக்​கரே நேற்று செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: கட்​சியி​லிருந்து விலகி செயல்பட்டு வரும் அந்த 6 பேரும் வெட்​கமில்​லாத, நன்​றி கெட்ட, ஊழல் பேர்​வழிகள்.

அவர்​கள் தங்​கள் ‘நற்​பெயரை​யும் குடும்​பப் பெயர்​களை​யும்’ பணயம் வைத்​து, ‘வெட்​கமின்​றி’ தங்​களைத் தாங்​களே விற்​பனை செய்​துள்​ளனர். 2024 நாடாளு​மன்​றத் தேர்​தலில் வெற்​றி​பெற உதவிய​வர்​களை அந்த எம்​.பி.க்​கள் காட்​டிக் கொடுத்து விட்​டனர். கட்​சிக்கு துரோகம் இழைத்த அவர்​களை மக்​கள் மன்​னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெட்​கமில்​லாத, நன்​றிகெட்ட, ஊழல் பேர்​வழிகள்: கட்​சி மாறிய 6 எம்​.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு
20 எம்​.பி.யை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் திரிணமூல் மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in