20 எம்​.பி.யை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் திரிணமூல் மனு

20 எம்​.பி.யை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் திரிணமூல் மனு
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் சட்​டப்​பேர​வை​ தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தோல்​வியடைந்​ததை தொடர்ந்​து, அக்​கட்​சி​யின் எம்​எல்​ஏ.க்​கள், எம்.பி.க்கள் பலர் மம்தா பானர்ஜிக்கு எதி​ராக போர்க்​கொடி தூக்​கினர். மக்​களவை எம்.பி.க்கள் 20 பேர் தேசி​ய​வாத மக்​கள் கட்​சி​யில் இணைந்து விட்ட​தாக அறி​வித்​தனர்.

இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்​லா​வை, திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அபிஷேக் பானர்ஜி நேற்று சந்​தித்​தார். அப்​போது வேறு கட்​சி​யில் இணைந்த 20 திரிண​மூல் எம்​.பி.க்​களை தகுதி நீக்​கம் செய்​யக்​கோரி அவர் மனு அளித்​தார். இது குறித்து அபிஷேக் பானர்ஜி கூறிய​தாவது: திரிண​மூல் எம்​.பி.க்​கள் 20 பேர் வேறு கட்​சி​யில் சேர்ந்​த​தாக கூறினர். யாருமே அந்த கட்​சி​யின் பெயரை கேள்​விப்பட்​ட​தில்​லை.

அந்த கட்​சி​யில் சேர்ந்​தவர்​களே அதன் பெயரை கேள்விபட்டதில்லை. அரசி​யல்​சான விதி​முறை​கள் படி, மக்​கள் பிர​தி​நிதி ஒரு​வர் கட்​சியை விட்டு தானாக வெளி​யேறி​னால், அவர் தனது உறுப்​பினர் தகு​தியை இழக்​கிறார். ஒரு கட்​சி​யின் சின்னத்தில் வெற்றி பெற்​று, மற்ற கட்​சி​யில் சேர்ந்​தால், அவரது உறுப்​பினர் பதவிரத்தாக வேண்​டும்.

அதனால், அவர்​களை தகுதி நீக்​கம் செய்​யும் மனுக்​கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க நாங்​கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த விஷ​யத்​தில் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் கூறி​யுள்​ளது. இவ்​வாறு அபிஷேக்​ பானர்ஜி தெரிவித்தார்.

20 எம்​.பி.யை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் திரிணமூல் மனு
அமெரிக்கா - கத்தார் கூட்டு முயற்சியால் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in