முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் - அடுத்த முதல்வராகிறார் சாம்ராட் சவுத்ரி

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் - அடுத்த முதல்வராகிறார் சாம்ராட் சவுத்ரி
Updated on
1 min read

பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்த முதல்வராக பதவியேற்கும் பொருட்டு, பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சாம்ராட் சவுத்ரி நாளை முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாரில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்​துஸ்​தான் அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக முற்​போக்கு கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக பதவி வகித்து வந்தார். அண்​மை​யில் நடந்த மாநிலங்​கள​வைத் தேர்​தலில் அவர் எம்​பி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். கடந்த 10-ம் தேதி மாநிலங்​களவை எம்​பி​யாக அவர் பதவி​யேற்​றுக் கொண்​டார்.

இதன் தொடர்ச்சியாக ஆளுநர் லெப்​டினென்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்​னனிடம், நிதிஷ் குமார் ராஜி​னாமா கடிதத்தை அளித்தார். பிஹார் மாநிலத்தின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்க இருக்கிறார். இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், பிஹார் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதன்மூலம், பிஹாரில் முதல்முறையாக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கிறார். சாம்ராட் சவுத்ரி நாளை முதல்வராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார் - அடுத்த முதல்வராகிறார் சாம்ராட் சவுத்ரி
“டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது இபிஎஸ்-தான்”: அன்புமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in