

மகபூபாபாத்: தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஆசிரியரிடம் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொலைபேசியில் பேசிய மர்ம நபர்கள், சிபிஐ அதிகாரிகள் என்றும், உங்கள் மீது உங்களின் ஆதார் எண்ணின் படி 17 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என்றும், ஆதலால் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும் மிரட்டி உள்ளனர்.
பின்னர், கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற உடனடியாக ரூ.75 லட்சத்தை மும்பையில் உள்ள ஒரு வங்கிக்கு அனுப்பி வைக்கும்படியும், இவ்வழக்கு விசாரணை முடிந்த பின்னர் மே மாதம் 2-ம் தேதி உங்கள் பணம் மொத்தமும் மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கே அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறி உள்ளனர். அவர்கள் கூறியபடி கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் படிப்படியாக ரூ.82 லட்சம் அனுப்பி உள்ளார்.
பின்னர் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஆசிரியர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் இது தொடர்பாக மகபூபாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.