காற்று மாசு பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயார்: ராகுல் காந்திக்கு மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு வாக்குறுதி

காற்று மாசு பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயார்: ராகுல் காந்திக்கு மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு வாக்குறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உட்பட பல்​வேறு நகரங்​களின் காற்று மாசு பிரச்​சினை குறித்து மக்​களவை​யில் விவா​திக்க தயார் என்று மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு தெரி​வித்​துள்​ளார்.

நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடரின் 10-வது நாள் கூட்​டம் நேற்று காலை தொடங்​கியது. மக்​களவை கூடியதும், மறைந்த முன்​னாள் மத்​திய உள்​துறை அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீலின் மறைவுக்கு அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது. கடந்த 2001-ம் ஆண்டு டிசம்​பர் 13-ம் தேதி நாடாளு​மன்ற வளாகத்​தில் தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் உயி​ரிழந்​தவர்​களுக்கு மக்​களவை​யில் இரங்​கல் தெரிவிக்​கப்​பட்​டது. பின்னர், மதி​யம் 12 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

மக்​களவை மீண்​டும் கூடியதும் எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, காற்று மாசு பிரச்​சினையை எழுப்​பி​னார். அவர் பேசும்​போது, “டெல்லி உட்பட பல்​வேறு நகரங்​களில் காற்று மாசு அதி​கரித்து வரு​கிறது. இதனால் ஆயிரக்​கணக்​கான குழந்​தைகள் சுவாசக் கோளாறால் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். காற்று மாசு​பாட்டை கட்​டுப்​படுத்த நாம் ஒன்​றிணைந்து செயல்பட வேண்​டும்’’ என்று தெரி​வித்​தார்.

இதற்கு நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்​தார். அவர் கூறும்​போது, “காற்று மாசு தொடர்​பாக அவை​யில் விவாதம் நடத்த காங்​கிரஸும் எதிர்க்​கட்​சிகளும் யோசனை தெரி​வித்​துள்​ளன. இதை ஏற்​றுக் கொள்​கிறோம்’’ என்று தெரி​வித்​தார்.

பாஜக எம்பி அனு​ராக் தாக்​குர், தமிழகத்​தின் திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்தை மக்​களவை​யில் நேற்று எழுப்​பி​னார். இதற்கு திமுக எம்​பிக்​கள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்து அமளி​யில் ஈடு​பட்​டதால் அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது.

உள்​நாட்​டில் விமான தயாரிப்பு: பிற்​பகலில் மக்​களவை கூடிய​போது இண்​டிகோ விமான சேவை​கள் ரத்து விவ​காரத்தை காங்​கிரஸ் எம்பி இம்​ரான் எழுப்​பி​னார். இதற்கு மத்​திய விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு கூறும்​போது, “இதைத் தொடர்ந்து உள்​நாட்​டில் பயணி​கள் விமானங்​களை தயாரிக்க மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது’’ என்று தெரி​வித்​தார்.

மாநிலங்​களவை நேற்று காலை கூடியதும் மறைந்த முன்​னாள் மத்​திய அமைச்​சர் சிவ​ராஜ் பாட்​டீலின் மறைவுக்கு அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது. இதே​போல கடந்த 2001-ல் நாடாளு​மன்ற வளாக தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களுக்​கும் அஞ்​சலி செலுத்​தப்​பட்​டது.

காற்று மாசு பிரச்சினை குறித்து விவாதிக்கத் தயார்: ராகுல் காந்திக்கு மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு வாக்குறுதி
இண்டிகோ விவகாரம்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in