முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ - நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ - நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: உள்​நாட்​டிலேயே கட்​டப்பட்ட முதல் மாசுக் கட்​டுப்​பாட்டு கப்​பலான ‘சமுத்​திர பிர​தாப்’ சேவையை கோ​வா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத்சிங் நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார்.

அப்போது ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: நாட்​டின் முதல் மாசு கட்​டுப்​பாட்டு கப்​பலை கோவா ஷிப்​யார்டு நிறு​வனம் (ஜிஎஸ்​எல்) கட்​டமைத்​துள்​ளது. 114.5 மீட்​டர் நீள​முள்ள இந்த கப்​பலில் 60 சதவீதத்​துக்​கும் அதி​க​மாக உள்​நாட்டு பொருட்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. 4,200 டன் எடை​யுள்ள இந்த கப்பல் 22 நாட்​டிக்​கல்​லுக்​கும் அதி​க​மான வேகத்​தில் 6,000 நாட்​டிக்​கல் மைல்​கள் வரை பயணிக்​கும் திறனை உள்​ளடக்​கி​யுள்​ளது.

கடல்​சார் மாசுக் கட்​டுப்​பாட்டு விதி​முறை​களை அமல்​படுத்​துதல், கடல்​சார் சட்ட அமலாக்​கம், தேடல், மீட்​புப் நடவடிக்கை மற்​றும் இந்​தி​யா​வின் பிரத்​தேயக பொருளா​தார மண்​டலத்தை பாது​காத்​தல் ஆகிய பணி​களுக்கு இந்த கப்பல் ஒரு முக்​கிய தளமாக செயல்​படும்.

இந்​தி​யா​வில் கட்​டப்​பட்ட மிகப்​பெரிய மற்​றும் மிக​வும் மேம்​பட்ட மாசுக் கட்​டுப்​பாட்​டுக் கப்​பலான சமுத்​திர பிர​தாப், நாட்​டின் கப்பல் கட்​டும் சிறப்​புக்​கும், தூய்​மை​யான, பாது​காப்​பான மற்​றும் தற்​சார்பு கொண்ட கடல்​சார் எதிர்​காலத்​துக்​கான நீண்​ட​கால தொலைநோக்​குப் பார்​வைக்​கும் ஒரு சான்​றாகத் திகழ்​கிறது. இவ்​வாறு ராஜ்​நாத் சிங் தெரி​வித்​தார்.

இந்த நிகழ்​வில் கோவா முதல்​வர் பிரமோத் சாவந்த், மத்​திய பாது​காப்​புத் துறை செய​லா​ளர் ராஜேஷ் குமார் சிங், இந்​திய கடலோர காவல்​படை தலைமை இயக்​குநர் பரமேஷ் சிவ​மணி உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

துணை ஆய்வாளர் ஜெனரல் அசோக் குமார் பாமா தலைமையில் இயங்கும் இந்த கப்பல் கொச்சியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதில், 14 அதிகாரிகள் மற்றும் 115 பணியாளர்கள் அடங்கிய குழு உள்ளது. இந்தக் குழுவில் ஆண்களுக்கு இணையாகப் பணியாற்றும் முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகளின் நியமனமும் அடங்கும் என்று இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ - நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in