பள்ளத்தாக்கில் விழுந்து புனே இளைஞர் இறந்த சம்பவத்தில் திருப்பம்: திட்டமிட்டு கொன்றதாக வருங்கால மனைவி, காதலன் கைது

கேதன் விஷால், சியா கோயல், சேத்தன் சவுத்ரி

கேதன் விஷால், சியா கோயல், சேத்தன் சவுத்ரி

Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டி​ர மாநிலம் புனே நகருக்கு அரு​கிலுள்ள கஹுஞ்சே பகு​தி​யைச் சேர்ந்​தவர் கேதன் விஷால் (25). இவர் தனது குடும்​பத்​தின் ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​தில் இயக்​குந​ராக இருந்​தார்.

இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்சயிக்​கப்​பட்டது. இந்​நிலை​யில் கேதன் கடந்த 19-ம் தேதி தனது வருங்​கால மனைவி சியா​வின் பிறந்​த​நாளை கொண்​டாட அவருடன் தங்​கள் பகு​தி​யில் உள்ள லோகா​காட் கோட்​டைக்கு சென்​றிருந்​தார். அங்கு சுமார் 350 அடி ஆழ பள்​ளத்​தாக்​கில் விழுந்து கேதன் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீ​ஸார் கூறிய​தாவது: சேத்தன் சவுத்ரி (22) என்ற இளைஞருடன் சியா காதலில் இருந்துள்ளார். கேதனை திரு​மணம் செய்​து​கொள்ள அவருக்கு விருப்​பமில்​லை. இதனால் கேதனை கொலை செய்ய அவர் திட்டமிட்​டார். அவரது முதல் முயற்சி தோல்வி அடைந்​தது. இரண்டாவது முயற்​சி​யில்​தான் கேதன் கொல்​லப்​பட்​டுள்​ளார்.

இதற்கு முன் ஜூன் 14-ம் தேதி கேதனுடன் லோகா​காட் கோட்டைக்கு சியா மலை​யேற்​றப் பயணம் சென்​றுள்​ளார். அப்போது பாம்பு வந்​து​விட்​டது என்ற பயமுறுத்தி கேதனை கீழேதள்ள முயன்​றுள்​ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்​தது. சியா மீது கேதனும் சந்​தேகம் அடைய​வில்​லை.

இதையடுத்து ஜூன் 19-ம் தேதி லோகா​காட்​டிற்கு மற்​றொரு பயணத்​துக்கு சியா திட்​ட​மிட்​டார். இந்​தப் பயணத்​தின்​போது காதலன் சேத்​தன் சவுத்ரி ரகசி​ய​மாக பின்​னால் வரவழைக்கப்பட்டார். பிறகு இரு​வரும் சேர்ந்து கேதனை மலைப்பள்​ளத்​தாக்​கில் தள்ளி கொன்​றுள்​ளனர்.

சியா​விடம் நடத்​திய விசா​ரணை​யில் சந்​தேகம் ஏற்​பட்​ட​தால் அவரது மொபைல் போன் பதிவு​கள், சமூக ஊடக செயல்​பாடு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன. இதில் உண்மை தெரிய​வந்​தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்​வாறு போலீ​ஸார் கூறினர். இந்​தச் சம்பவம் கேதன்- சியா திரு​மணத்​திற்​குச் சில நாட்​களுக்கு முன்பு நடந்​துள்​ளது.

<div class="paragraphs"><p>கேதன் விஷால்,&nbsp;சியா கோயல்,&nbsp;சேத்தன் சவுத்ரி</p></div>
கத்தார் எரிவாயு விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in