கத்தார் எரிவாயு விபத்தில் நெல்லை இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்
பபித், சுஜித்குமார், சுவின்

பபித், சுஜித்குமார், சுவின்

Updated on
1 min read

திருநெல்வேலி/ சென்னை: கத்​தார் நாட்​டில் உள்ள எரி​வாயு ஆலை​யில் ஏற்​பட்ட தீ விபத்​தில், திருநெல்​வேலி மாவட்​டத்​தைச் சேர்ந்த 3 இளைஞர்​கள் உயி​ரிழந்​தனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்ததுடன் உடல்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கத்​தா​ர் நாட்டில் உள்ள ராஸ் லப்​பான் தொழிற்​பேட்​டை​யில், பர்​சான் என்ற எரி​வாயு உற்​பத்தி தொழிற்​சாலை செயல்​பட்டு வரு​கிறது. ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வந்​தநிலையில், மீண்​டும் தொடங்​கு​வதற்​கான பணி​கள் நடை​பெற்று வந்​தன. இங்கு இந்​தியா மற்​றும் பாகிஸ்​தானைச் சேர்ந்த 100-க்​கும் மேற்​பட்​டோர்​ பணிபுரி​கின்​றனர்.

இந்நிலையில் நேற்று முன்​தினம் ஆலை​யின் ஒரு பகு​தி​யில் தீ விபத்து ஏற்​பட்​டது. தீ மளமளவென பரவிய​தில், அங்​கிருந்த தொழிலா​ளர்​கள் உள்ளே சிக்​கிக்​கொண்​டனர். அவர்​களில் இந்​தி​யா​வைச் சேர்ந்த 12 பேரும், பாகிஸ்​தானைச் சேர்ந்த ஒரு​வரு​மாக மொத்​தம் 13 பேர் உயி​ரிழந்​த​தாக கூறப்​படு​கிறது.

மேலும், 66 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்​களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்​நிலை​யில், உயி​ரிழந்தவர்​களில் 3 பேர் திருநெல்​வேலி மாவட்​டம் ராதாபுரம் வட்​டாரத்​தைச் சேர்ந்​தவர்​கள்.

அவர்​களது விவரம் வரு​மாறு: பணகுடி அருகே உள்ள சிவ​காமிபுரம் முத்​து​ராஜ் மகன் சுஜித்​கு​மார் (25). இவர் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி கத்​தா​ருக்கு சென்​றுள்​ளார். இவரது தந்தை டிராக்​டர் ஓட்​டுநர். தாய் மல்​லிகா கூலி தொழிலாளி. உயி​ரிழந்த சுஜித்குமார் இவர்​களுக்கு ஒரே மகனா​வார். இது​போக, அழகியநம்​பிபுரத்​தைச் சேர்ந்த மிக்​கேல் மகன் சுவின் (24), சிதம்​ப​ராபுரத்​தைச் சேர்ந்த தங்​க​ராஜா மகன் பபித் (26) ஆகியோ​ரும் உயி​ரிழந்​தனர். கத்​தா​ரில் நடை​பெற்ற தொழிற்​சாலை விபத்​தில் உயி​ர் இழந்த இந்த 3 பேரின் குடும்​பத்​தினரும் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர். அவர்​களது கிராமங்​கள் சோகத்​தில் மூழ்​கி​யுள்​ளன.

இதனிடையே இச்சம்பவம் குறித்து முதல்வர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை தமிழகம் கொண்​டு​வர, வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் மற்​றும் இந்​தி​யத் தூதரகம் மூல​ம் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​ பட்டுள்ளன. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​கு இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​வதோடு, அவர்களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.10 லட்​சம் முதல்​வர் நிவாரண நிதி​யில் வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன். மேலும், விபத்து குறித்து அறிய இந்​தி​யா​வுக்​குள் +91 1800 309 3793 என்ற எண்​ணிலும் வெளி​நாட்டு தொடர்​புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற எண்​களை​யும் பயன்​படுத்​தலாம் எனத் தெரி​வித்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>பபித்,&nbsp;சுஜித்குமார்,&nbsp;சுவின்</p></div>
முதல்வர் விஜய் ஆக்‌ஷனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரியாக்‌ஷனும் சரியா? - ஒரு ‘மாண்புமிகு’ பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in