

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டம் தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து சனிக்கிழமை முடிவுக்கு வந்தது.
போராட்டம் வாபஸ் பெற்றாலும், இயக்கத்தின் வெற்றியைக் கொண்டாட நூற்றுக்கணக்கான மாணவர்கள் சனிக்கிழமை இரவு வரை ஜந்தர் மந்தர் பகுதியிலேயே தங்கினர். அப்போது, கேடயங்கள் மற்றும் லத்திகளுடன் திரண்ட டெல்லி காவல் துறையினர், மாணவர்களை வெளியேற்றினர். பின்னர் தூய்மைப் பணியாளர்கள் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தினர்.