போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் ‘ஏ.கே.47’ துப்பாக்கியால் காவலர் 4 முறை சுட்டார்: பிஹார் அரசு

உச்ச நீதிமன்றத்தில் தகவல்
போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் ‘ஏ.கே.47’ துப்பாக்கியால் காவலர் 4 முறை சுட்டார்: பிஹார் அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் தேர்வுக்கு எதி​ராக மாணவர்​கள் நடத்​திய போராட்​டத்​தின் போது, போராட்​டக்​காரர்​களால் சுற்றி வளைக்​கப்​பட்​டு, கூட்​டத்​துக்​குள் சிக்​கிக் கொண்​டதன் காரண​மாகவே, காவலர் ஒரு​வர் ஏ.கே.-47 துப்​பாக்​கி​யால் 4 முறை சுட்​ட​தாக பிஹார் அரசு உச்​ச நீ​தி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்தை கண்​டித்​து, பிஹாரில் கடந்த மாதம் 25-ம் தேதி பந்த் நடை​பெற்​றது. அப்​போது, சிவான் மாவட்டத்​தில் நடை​பெற்ற மாணவர்​கள் போராட்​டத்​தின் போது, பிஹார் ஆயுதப்​படை காவலர் ஒரு​வர் ஏ.கே.47 ரக துப்​பாக்​கி​யால் மாணவர்​கள் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​னார்.

இதுதொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. வழக்கு விசா​ரணை​யின் போது, பிஹார் அரசு தாக்​கல் செய்த பதில் மனு​வில், ‘மாணவர் போராட்​டத்​தின் போது, அபிஷேக் குமார் என்ற காவலர் போராட்​டக்​காரர்​களால் சூழப்​பட்​ட​தால் கூட்​டத்​துக்​குள் சிக்​கிக் கொண்​ட​தால், நிலை​மையை சமாளிப்​ப​தற்​காக தனது ஏ.கே.-47 துப்​பாக்​கி​யால் வானத்தை நோக்கி 4 முறை சுட்​டார்.

இந்​தத் துப்​பாக்​கிச்​சூட்​டில் போராட்​டக்​காரர்​கள் யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.இச்​சம்​பவம் தொடர்​பாக, சிவான் மாவட்ட எஸ்பி பூரண் குமார் ஜாவை பிஹார் அரசு பதவி நீக்​கம் செய்​துள்​ளது.

இதற்​கிடையே, நீட் வினாத்​தாள் கசிவு தொடர்​பாக மாணவர்களின் நாடு தழு​விய போராட்​டத்​தின் போது நடை​பெற்ற காவல்​துறை​யினரின் அத்​து​மீறல்​கள் குறித்து விசா​ரணை நடத்த ஒய்​வு​பெற்ற உச்ச நீதி​மன்ற நீதிபதி தலை​மை​யில்​ 3 பேர்​ கொண்ட உயர்​மட்​ட குழுவை அமைத்​து உச்​ச நீதிமன்​றம்​ உத்தரவிட்டுள்ளது.

போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் ‘ஏ.கே.47’ துப்பாக்கியால் காவலர் 4 முறை சுட்டார்: பிஹார் அரசு
உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்த புதிய இயக்குநரகம் உருவாக்கம்: தமிழக அரசு முடிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in