

புதுடெல்லி: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த நாள் சகோதரத்துவத்தையும், அன்பையும் வளர்க்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஈத் முபாரக் வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டிருந்தார்.
இதுபோல பார்சி புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்த வாழ்த்துச் செய்தியில், ‘‘நவ்ரோஸ் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தாண்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்பட பிரார்த்திக்கிறேன். மேலும் அனைத்து ஆசைகளும் நிறைவேறட்டும். நவ்ராஸ் முபாரக்’’ என தெரிவித்துள்ளார்.