தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க என்சிபி செயல் தலை​வர் சுப்ரியா சுலே நிபந்தனை

என்.சி.பி.செயல் தலை​வர் சுப்ரியா சுலே

என்.சி.பி.செயல் தலை​வர் சுப்ரியா சுலே

Updated on
1 min read

மும்பை: அனைத்து மாநிலங்​களுக்​கும் மக்​களவை இடங்​களின் எண்​ணிக்கை 50 % அதி​கரிக்​கப்​பட்​டால் மட்​டுமே தொகுதி மறுவரையறை மசோ​தாவை ஆதரிப்​பது குறித்து தங்​கள் கட்சி பரிசீலிக்​கும் என்று தேசி​யவாத காங்​கிரஸ் (சரத் பவார்) கட்சியின் செயல் தலை​வர் சுப்​ரியா சுலே கூறி​னார்.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்க உள்​ளது. இக்​கூட்​டத்தொடரில் மக்​களவை தொகுதி மறுவரையறை மசோதா தாக்​கல் செய்​யப்​படலாம் என கருதப்படு​கிறது.

இந்​நிலை​யில் தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்) கட்​சி​யின் செயல் தலை​வரும் பாராமதி தொகுதி எம்​.பி.​யு​மான சுப்​ரியா சுலே நேற்று மும்​பை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: அனைத்து மாநிலங்​களுக்​கும் சமமான விகிதத்​தில் மக்​களவை இடங்​கள் 50 % அதி​கரிக்​கப்​படு​வதை உறுதி செய்​தால் மட்​டுமே, தொகுதி மறு​வரையறை மசோதாவை ஆதரிப்​பது குறித்து எங்​கள் கட்சி பரிசீலிக்​கும்.

மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு ஆகியோருடனான சந்​திப்​பின்​போது, இந்த சட்​டம் குறித்து எங்​கள் கட்​சி​யின் ஆட்​சேபனை​களை தெரி​வித்​தோம். தொகு​தி​களின் எல்லைகளை மறு​வரையறை செய்​யும் ​போது அரசு கையாளக்​கூடிய சூத்​திரம் குறித்து எங்​களுக்கு கவலைகள் உள்​ளன. இவ்வாறு அவர் தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p><em>என்.சி.பி.செயல் தலை​வர் சுப்ரியா சுலே</em></p></div>
ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற உச்ச நீதி​மன்​றத்​தில் அரசு மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in