பேரிடர் தகவல் அமைப்பு பரிசோதனை: நாடு முழுவதும் போன்களில் ஒலித்த ‘பீப்' சத்தம்

பேரிடர் தகவல் அமைப்பு பரிசோதனை: நாடு முழுவதும் போன்களில் ஒலித்த ‘பீப்' சத்தம்
Updated on
1 min read

புதுடெல்லி: இயற்கைப் பேரிடர் காலத்​தில் செல்​போன் மூலம் எச்​சரிக்கை செய்​யும் தகவல் அமைப்பை மத்​திய அரசு நேற்று பரிசோ​தித்​தது. இதனால் நாடு முழு​வதும் செல்​போன்​களில் திடீரென ‘பீப்' சத்​தம் ஒலித்​தது.

பேரிடர் மற்​றும் பொதுப் பாது​காப்பு அவசர காலத்​தில் செல்​போன் மூலம் மக்​களுக்கு எச்​சரிக்கை செய்​யும் தகவல் அமைப்பை (Cell Broadcast emergency alert system) மத்​திய அரசு உரு​வாக்கி உள்​ளது.

இந்​தத் தகவல் அமைப்பு நேற்று முறைப்​படி தொடங்கி வைக்​கப்​பட்​டது. இதனால் நாடு முழு​வதும் செல்​போன் பயன்​படுத்​தும் கோடிக்​கணக்​கானோர் ஒரு சோதனைச் செய்​தி​யைப் பெற்​றனர்.

‘அதிதீ​விர எச்​சரிக்​கை' என்று குறிப்​பிடப்​பட்ட அந்​தச் செய்​தி​யில், ‘பு​திய உடனடி பேரிடர் எச்​சரிக்கை சேவை’ செயல்​படுத்​தப்​பட்டு இருப்​பது பற்றி தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது. மேலும் இது ஒரு சோதனை மட்​டுமே என்​ப​தால் பதி​லுக்கு எது​வும் செய்​யத் தேவை​யில்லை என்று தெளிவுபடுத்​தி​யது.

மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவின் வழி​காட்​டு​தலின் கீழ், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணை​யத்​தின் ஆதர​வுடன், மத்​திய தகவல் தொடர்பு அமைச்​சர் ஜோதிர் ஆதித்ய சிந்​தி​யா, செல் பிராட்​காஸ்ட் எச்​சரிக்கை அமைப்பை அறி​முகப்​படுத்​தி​னார். இந்த அமைப்​பு, இணைய வசதி அல்​லது மொபைல் செயலி தேவை​யின்றி செயல்​படு​கிறது. வழக்​க​மான எஸ்​எம்​எஸ் எச்​சரிக்​கையை விட இது மேம்​பட்​ட​தாகும். உடனடி​யாக கவனத்தை ஈர்க்க கூடிய​தாகும்.

செல்​போன்​கள் ‘சைலன்ட்' ஆக வைக்​கப்​பட்​டிருந்​தா​லும் அல்​லது தொந்​தரவு செய்ய வேண்​டாம் (do-not-disturb) என்ற உத்​தரவு ஆக்​டிவேட் செய்​யப்​பட்​டிருந்​தா​லும் ஒலி​யுடன் கூடிய எச்​சரிக்கை தகவலை இது தரக்​கூடிய​தாகும்.

பேரிடர் தகவல் அமைப்பு பரிசோதனை: நாடு முழுவதும் போன்களில் ஒலித்த ‘பீப்' சத்தம்
கடும் வெயிலால் 12 மாநிலங்களில் பரவும் காட்டுத் தீ: மத்திய பிரதேசத்தில் 634 இடங்கள் பற்றி எரிகின்றன

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in