தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

புதுடெல்லி: தனி​யார் சுயநி​திப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரி​யம் அமைக்க வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட பொதுநல மனு மீது, மத்​திய அரசு மற்​றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. நான்கு வாரங்​களுக்​குள் பதிலளிக்​கு​மாறு நீதி​மன்​றம் உத்தரவிட்டுள்​ளது.

அகில இந்​திய ஆசிரியர் கூட்​டமைப்​பின் தேசிய ஒருங்​கிணைப்​பாள​ராக உள்ள லிஜிமோல் ஜார்ஜ் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் இந்த பொதுநல மனுவை தாக்​கல் செய்​துள்​ளார். அதில், நாடு முழு​வதும் சுமார் 14.72 லட்​சம் பள்​ளி​களில் 98 லட்​சத்​திற்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் பணி​யாற்றி வரு​வ​தாக​வும், இதில் அங்​கீகரிக்​கப்​பட்ட தனி​யார் சுயநி​திப் பள்​ளி​களில் மட்​டும் 37.30 லட்​சம் ஆசிரியர்​கள் கல்வி கற்​பித்​தல் எனும் இன்​றியமை​யாத பொதுப் பணியை மேற்​கொண்டு வரு​வ​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த ஆசிரியர்​களின் அரசி​யலமைப்பு உரிமை​கள், கண்​ணி​யம், சமூகப் பாது​காப்பு மற்​றும் பொது நலனைப் பாது​காத்து நிலைநிறுத்​தும் வகை​யில், “தேசிய தனி​யார் பள்ளி ஆசிரியர் நல வாரி​யம்” ஒன்று அமைக்​கப்பட வேண்​டும் என மனு​வில் வலி​யுறுத்​தப்​பட்​டு உள்​ளது.

மேலும், நாடு முழு​வதும் உள்ள தனி​யார் பள்ளி ஆசிரியர்​கள் அனை​வருக்​கும் ஒரே மாதிரி​யான ஓய்​வூ​திய திட்​டம், பணிக்​கொடைகள், மருத்​து​வக் காப்​பீடு, ஓய்​வுக்​குப் பிந்​தைய சமூகப் பாது​காப்பு ஆகிய​வற்றை உறுதி செய்​யும் விரி​வான சட்​டக் கட்​டமைப்பு ஒன்று உரு​வாக்​கப்பட வேண்​டும் என்​றும் கோரப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக உரிய உத்​தர​வு​களை மத்​திய மற்​றும் மாநில அரசுகளுக்கு பிறப்​பிக்​கு​மாறும் மனு​வில் நீதி​மன்​றத்​திடம் வேண்​டு​கோள் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த மனு நீதிப​தி​கள் விக்​ரம் நாத் மற்​றும் சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய உச்ச நீதி​மன்ற அமர்வு முன் விசா​ரணைக்கு வந்​தது. மனுவை பரிசீலித்த நீதிப​தி​கள், இது தொடர்​பாக மத்​திய அரசு மற்​றும் மாநில அரசுகள் பதிலளிக்​கு​மாறு நோட்​டீஸ் பிறப்பித்து உத்​தர​விட்​டனர். இந்த வழக்கு அடுத்தகட்ட வி​சாரணைக்​காக அக்​டோபர் 9-ம் தேதிக்​கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
“இளம் தலைமுறையினரை கைவிடுகிறது இந்திய கல்வி அமைப்பு” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in