தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று ​விட்டன: போலீஸாரின் தகவலை ஏற்காத நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு உத்​தரவு

தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று ​விட்டன: போலீஸாரின் தகவலை ஏற்காத நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு உத்​தரவு
Updated on
1 min read

லக்னோ: உத்​தரபிரதேச மாநிலம் லக்​கிம்​பூர் மாவட்​டம் கோட்வாலி சதர் காவல் நிலைய சரகத்​துக்​குட்​பட்ட பகு​தி​யில் 2007-ம் ஆண்​டில் வரதட்சணைக் கொடுமை​யால் பெண் ஒரு​வர் இறந்​து​விட்​டார். இந்த வழக்​கில் அந்​தப் பெண்​ணின் கணவர், அவரது குடும்​பத்​தார் கைது செய்​யப்​பட்​டனர்.

அப்​போது அந்​தப் பெண்​ணின் தங்க நகைகளை பறி​முதல் செய்த போலீ​ஸார் அவற்றை போலீஸ் நிலைய காப்பக அறை​யில் வைத்தனர். இந்த வழக்கில் கடந்த பிப்​ர​வரி மாதம் பெண்​ணின் கணவர் விடுவிக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்​தி​லுள்ள தங்க நகைகளை தங்​களிடம் தரு​மாறு கணவர், நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​தார்.

அப்​போது போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில் கூறிய​தாவது: கடந்த 2013-ல் கடும் மழை பெய்​த​ போது காப்பக அறை​யில் துணி​யால் சுற்றி வைக்​கப்​பட்​டிருந்த தங்க நகைகள் நனைந்​து​விட்​டன. அவற்றை உலர வைப்பதற்காக காப்பக அறை​யின் மேல் திறந்​தவெளி​யில் வைத்​திருந்​தோம்.

அப்​போது அறை​யின் மேல்​பகு​திக்கு எங்​கிருந்தோ வந்த குரங்​குக் கூட்​டம் தங்க நகைளை வீசி எறிந்​தும், உடைத்​தும் பாழ்படுத்திவிட்​டன. மேலும் தங்க நகைகளை குரங்​கு​களே எடுத்துச் சென்​று​விட்​டன. அந்த தங்க நகைகளை எங்​களால் மீட்க முடிய​வில்​லை. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது. ஆனால், போலீஸார் அளித்த தகவலை லக்​கிம்​பூர் மாவட்ட நீதி​மன்​றம் ஏற்க​வில்​லை. இதுதொடர்​பாக தீவிர​மாக விசா​ரித்து அறிக்கை அளிக்​கு​மாறு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் கடந்த 17-ம் தேதி லக்​கிம்​பூர் மாவட்ட போலீ​ஸார் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த பிர​மாணப் பத்​திரத்​தில், போலீஸ் அறை​யின் காப்​பகத்​தில் அதி​காரி​களாகச் செயல்​பட்ட சந்​திரிகா பிர​சாத், ராம்​பக்ஸ் பால் ஆகியோர் 2007 மற்​றம் 2009-ம் ஆண்டுக்கு இடைப்​பட்ட காலத்​தில் இறந்​து​விட்​டனர். எனவே, இந்த வழக்​கில் மேலும் விசா​ரணையை நீட்​டிக்க முடிய​வில்லை. வழக்கை முடித்​து​விடலாம் என்​று தெரி​வித்​துள்​ளனர்.

அதே​நேரத்​தில் போலீஸ் நிலை​யத்​தில் காப்​பாளர்​களாக இருந்த போலீ​ஸாரின் பெயர்ப் பட்​டியலில் உள்ள பெயர்​களும், போலீஸார் பிர​மாணப் பத்​திரத்​தில் உள்ள பெயர்​களும் ஒத்​துப்​போக​வில்லை. காப்பக அறை​யின் பொறுப்​பாளர்​களாக மோல்​ஹே​ராம், ரமா​காந்த் திவாரி, மேவ​ராம், ஈஸ்​வர் தயாள் ஆகியோர் செயல்​பட்டு வந்​துள்​ளனர். இதில் ஈஸ்​வர் தயாள் மட்​டுமே இறந்துவிட்​டார்.

ஆனால், பிர​மாணப் பத்​திரத்​தில் சந்​திர​காந்த் பிர​சாத், ராம்பக்ஸ்பால் ஆகியோரது பெயர்​கள் கொடுக்​கப்​பட்​டுள்​ளது சந்​தேகத்தை எழுப்​பு​கிறது என்று பெண்​ணின் கணவரது சார்​பில் வாதாடும் வழக்​கறிஞர் சைலேந்​திர கவுட் தெரி​வித்​துள்​ளார்​. இந்​த வழக்​கு உத்​தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நகைகளைக் குரங்குகள் தூக்கி சென்று ​விட்டன: போலீஸாரின் தகவலை ஏற்காத நீதிமன்றம் தீவிர விசாரணைக்கு உத்​தரவு
வெட்​கமில்​லாத, நன்​றிகெட்ட, ஊழல் பேர்​வழிகள்: கட்​சி மாறிய 6 எம்​.பி.க்கள் மீது ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in