காதலி உடலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை வீரர்

காதலி உடலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை வீரர்
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வின், விஜயநகரம் மாவட்​டம், ராஜம் பகு​தியை சேர்ந்​தவர் சி.ர​வீந்​திரா (35). இவர் விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கடற்​படை​ தளத்தில் தொழில்​நுட்ப பிரி​வில் பணியாற்றுகிறார். இவரது மனைவி விஜயநகரத்​தில் உள்ள தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார்.

கரோனா பெருந்​தொற்று காலத்​தில் கடற்​படை வீரர் ரவீந்திராவிற்கு சமூக வலை​தளம் மூலம் விசாகப்​பட்​டினத்தை சேர்ந்த மவுனிகா (29) என்​பவருடன் நட்பு ஏற்​பட்​டது. இரு​வரும் அடிக்​கடி தனிமை​யில் சந்​தித்​ததனர். ரவீந்​தி​ரா​விடம் இருந்து மவுனிகா இது​வரை ரூ.3.5 லட்​சம் வரை பணம் வாங்கியிருப்பதாகக் கூறப்​படு​கிறது. கூடு​தலாக பணம் வேண்டும் என்று அவர் தொடர்ந்து வற்​புறுத்தி உள்​ளார்.

இதனால் ஆத்​திரம் அடைந்த ரவீந்​திரா அவரை கொலை செய்ய திட்​ட​மிட்டு உள்​ளார். இதன்​படி கடந்த ஞாயிற்​றுக்​ கிழமை மாலை மவுனி​காவை தனது வீட்​டுக்கு அழைத்​துள்​ளார். இரு​வருக்​கும் இடையே கடும் வாக்​கு ​வாதம் ஏற்​பட்​டிருக்​கிறது. அப்​போது மவுனிகாவை ரவீந்​திரா கத்​தி​யால் குத்தி கொலை செய்​தார்.

பின்​னர் உடல் பாகங்​களை தனித்​தனி​யாக வெட்டி பிரிட்​ஜில் பிளாஸ்​டிக் பையில் மூட்டை கட்டி வைத்​துள்​ளார். தலையை மட்டும் வெட்டி ஆளில்​லாத பகு​திக்கு கொண்டு சென்று எரித்​தார். மவுனி​கா​வின் செல்​போனை​யும் எரித்​தார். வீட்​டுக்கு வந்தன் பிறகு அவர் தனது நெருங்​கிய நண்​பரிடம் அனைத்து விவரங்களை​யும் கூறி​யுள்​ளார்.

உடனடி​யாக போலீ​ஸில் சரண் அடை​யு​மாறு அந்த நண்​பர் அறிவுறுத்தி உள்​ளார். அதன்​படி, விசாகப்​பட்​டினம் போலீ​ஸில் ரவீந்​திரா சரண் அடைந்​தார். அவரை போலீ​ஸார் கைது செய்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

காதலி உடலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கடற்படை வீரர்
2025-ம் ஆண்டில் 431 பேர் பாம்பு கடித்து உயிரிழப்பு: மத்திய அரசு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in