“வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பிரதமர் மோடிதான் முதலில் பதவி விலக வேண்டும்” - மம்தா வலியுறுத்தல்

“வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பிரதமர் மோடிதான் முதலில் பதவி விலக வேண்டும்” - மம்தா வலியுறுத்தல்
Updated on
1 min read

கொல்கத்தா: ​வாக்​காளர் பட்​டியலில் ஊடுரு​வல்​காரர்​கள் இடம்​பெற்​றுள்​ளனர் என்​றால் அந்​தப் பட்​டியலை பயன்​படுத்தி வெற்​றி​பெற்ற பிரதமர் மோடி முதலில் பதவி விலக வேண்​டும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்​வர் மம்தா பானர்ஜி கூறி​னார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு வரும் 23, 29 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் தெற்கு தினாஜ்பூர் மற்​றும் ஹரி​ராம்​பூரில் நடை​பெற்ற பொதுக் கூட்​டங்​களில் முதல்​வர் மம்தா பானர்ஜி நேற்று பேசி​ய​தாவது: கடந்த 2024 மக்​கள​வைத் தேர்​தலில் பயன்​படுத்​தப்​பட்ட அதே வாக்​காளர் பட்​டியலை சட்​டமன்ற தேர்​தல்​களில் பயன்​படுத்த மறுப்​பது ஏன்?

வாக்​காளர் பட்​டியலில் ஊடுரு​வல்​காரர்​கள் இடம்​பெற்​றிருந்​தால் கடந்த காலங்​களில் பிரதமர் மோடி​யும் அவர்​களின் வாக்​கு​களைப் பெற்​றுத்​தான் வெற்றி பெற்​றார். ஊடுருவல்காரர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்திதானே வெற்றி பெற்றார். எனவே அவர்​தான் முதலில் ராஜி​னாமா செய்ய வேண்​டும்.

மேற்கு வங்​கத்​துக்​குள் வெளி​யாட்​கள் நுழைவதற்கு வசதி செய்​யும் வகை​யில், அரசு அதி​காரி​கள் இடமாற்​றம் செய்​யப்​படு​கின்​றனர். பாது​காப்​புப் படைகளின் செயல்​பாடு​களி​லும் முறை​கேடு​கள் நடை​பெறுகின்​றன. மத்​திய ரிசர்வ் போலீஸ் படை வாக​னங்​களைப் பயன்​படுத்​திப் பணம் கொண்டு வரப்​படு​கிறது. இது தொடர்​பான ஆவணங்​கள் என்​னிடம் உள்​ளன. உரிய நேரத்​தில் அவற்றை நான் வெளி​யிடு​வேன்.

மேற்கு வங்​கத்​துக்கு மத்​திய அமைச்​சர் அமித் ஷாவின் வரு​கை, தேர்​தல் ரீதி​யாக பாஜக​வுக்கு பலன் அளிக்​காது. மாறாக, தேர்​தல் காலத்​தில் அவர் இங்கு நீண்ட நாட்​கள் தங்​கி​யிருப்​பது, அக்​கட்​சி​யின் வாக்கு சதவீதத்​தைக் குறைப்​ப​தற்​குத்​தான் வழி​வகுக்​கும்.

வாக்​காளர் பட்​டியலில் பெயர் நீக்​கம் தொடர்​பாக மால்​டா​வில் புதன்​கிழமை நீதித்​துறை அதி​காரி​கள் பல மணி நேரம் முற்​றுகை​யிடப்​பட்​டனர். இந்த சம்​பவத்​திற்கு ஏஐஎம்​ஐஎம் மற்​றும் இந்​திய மதச்​சார்​பற்ற முன்​னணி ஆகிய அமைப்​பு​களே காரணம். காங்​கிரஸ், பாஜக ஆகிய கட்​சிகள் இந்த சம்​பவத்தை தூண்​டி​விட்​டன. இந்த வழக்​கின் முக்​கிய குற்​ற​வாளி கைது செய்​யப்​பட்​டுள்​ளார். பாஜக​வினர் அந்த முக்​கிய குற்​ற​வாளியை ஏஐஎம்​ஐஎம் கட்​சி​யிட​மிருந்து கடன் வாங்கி இங்கு அழைத்து வந்​துள்​ளனர்​. இவ்​வாறு மம்​தா பானர்​ஜி பேசி​னார்​.

“வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பிரதமர் மோடிதான் முதலில் பதவி விலக வேண்டும்” - மம்தா வலியுறுத்தல்
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in