

புதுடெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மற்றும் 11 பேருக்கு எதிராகக் சிறப்பு நீதிமன்றம் கடந்த அக்டோபர் 13-ம் தேதி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. இதை எதிர்த்து லாலு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.