லடாக் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் 6 மாதத்துக்கு பிறகு விடுதலையாகிறார்

சோனம் வாங்​சுக்

சோனம் வாங்​சுக்

Updated on
1 min read

புதுடெல்லி: லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் சோனம் வாங்​சுக் உண்​ணா​விரதம் தொடங்​கி​னார். அப்​போது ஏற்​பட்ட கலவரத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்து அவர் தேசி​யப் பாது​காப்​புச் சட்​டத்​தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து வாங்சுக் மனைவி கீதாஞ்​சலி ஆங்​மோ, உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இந்த மனு மீதான விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்​தது.

மேலும் அவரது உடல்​நிலையை கருத்தில் கொண்டு தடுப்​புக் காவலை மறு​பரிசீலனை செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.

இதையடுத்து, சோனம் வாங்​சுக்​கின் தடுப்​புக் காவலை ரத்து செய்ய அரசு முடிவு செய்​துள்​ளது என்று மத்திய உள்துறை நேற்று வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 6 மாத சிறை​வாசத்​துக்கு பிறகு சோனம்​ வாங்​சுக்​ விடு​தலை​யாக உள்​ளார்​.

<div class="paragraphs"><p>சோனம் வாங்​சுக்</p></div>
துபாயில் தாயின் மருத்துவ கட்டணம் ரூ.1.25 கோடி: இந்தியா அழைத்து வர முடியாமல் தவிக்கும் தமிழர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in