கேரள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங். வரவேற்பு, இடதுசாரி, பாஜக நிராகரிப்பு

கேரள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங். வரவேற்பு, இடதுசாரி, பாஜக நிராகரிப்பு
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள சட்​டப்​பேரவை தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்பை காங்​கிரஸ் வரவேற்​றுள்​ளது. இடது​சாரி கட்​சி​யும் பாஜக​வும் நிராகரித்​துள்​ளன.

கேரள சட்​டப்​பேர​வை​யில் மொத்​த​முள்ள 140 இடங்​களுக்கு கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இதன் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக் கணிப்பு நேற்று வெளி​யானது. இதில் காங்​கிரஸ் தலை​மையி​லான யு​டிஎப் கூட்​டணி இங்கு ஆட்​சியை கைப்​பற்​றும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

ஆளும் இடதுசாரி கூட்டணி தோல்வியை சந்திக்கும், பாஜக சில இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்படிருந்தது. இந்த முடிவு​களை காங்​கிரஸ் கட்சி வரவேற்​றுள்​ளது.

இதுகுறித்து கேரள மாநில காங்​கிரஸ் தலை​வர் சன்னி ஜோசப், கட்​சி​யின் மூத்த தலை​வர் கே.​முரளீதரன் ஆகியோர் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “நாங்​கள் கணித்​தது போலவே கருத்​துக்​கணிப்பு முடிவு வெளி​யாகி​யுள்​ளது. இத்​தேர்​தலில் நாங்​கள் வெற்று பெறு​வது உறு​தி. மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்​கைக்கு பிறகு யுடிஎப் ஆட்சி அமைக்​கும். முன்​ன​தாக முதல்​வர் யார் என்று முடிவு செய்​யப்​படும்” என்று தெரி​வித்​தனர்.

எல்​டிஎப் கூட்​ட​ணி​யில் உள்ள இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தலை​வர் சாதிக் அலி ஷிகாப் தங்​கல் கூறுகை​யில், “கருத்​துக்​கணிப்பு முடி​வில் வெளி​யான தொகு​தி​களை விட கூடு​தல் தொகு​தி​களை நாங்​கள் பெறு​வோம்” என்​றார். அதேவேளை​யில் இந்த முடிவு​களை மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணி​யும் (எல்​டிஎப்), பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யும் ஏற்​க​வில்​லை.

எல்​டிஎப் தரப்​பில் மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் எம்​.​வி.கோ​விந்​தன் உள்​ளிட்ட தலை​வர்​கள் கூறுகை​யில், “இந்​தக் கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் எவ்​வித முக்​கி​யத்​து​வ​மும் அற்​றவை. 2021-ம் ஆண்டு தேர்​தலில் எல்​டிஎப் தோல்வி அடை​யும் என கருத்​துக்​கணிப்​பு​கள் வந்​தன. ஆனால் அவை தவறென நிரூபிக்​கப்​பட்​டது.

இத்​தேர்​தலில் நாங்​கள் வெற்றி பெறு​வது உறு​தி. நாங்​கள் மூன்​றாவது முறை​யாக ஆட்​சிக்கு வரு​வோம். பாஜக 3 முதல் 14 இடங்​கள் வரை வெற்றி பெறும் என்​பதும் ஏற்க முடி​யாது. அக்​கட்சி ஒரு இடத்​தைக் கூட கைப்​பற்​றாது” என்று தெரி​வித்​தனர். பாஜக தலை​வர் பி.கே.கிருஷ்ண​தாஸ் கூறுகை​யில், “கேரளா​வில் ஆளும் கட்​சிக்கு எதி​ரான மனநிலை உள்​ளது. அதே சமயம் யுடிஎப் கூட்டணிக்கு சாதகமான அலை எதுவும் வீசவில்லை. கணிக்கப்பட்டதை விட அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.

கேரள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: காங். வரவேற்பு, இடதுசாரி, பாஜக நிராகரிப்பு
வெற்றி பெற்றதும் பனையூருக்கு வந்துவிடுங்கள்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் திடீர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in