குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
Updated on
1 min read

அகமதாபாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்த ஷம்​சுதீன் முசாஜி கெடா​ வாலா​வுக்​கும் அவருடைய மனைவி பர்சானா​வுக்​கும் இடையே பிரச்​சினை ஏற்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

இதனால், ஷம்​சுதீன், அவரது சகோ​தரர் இக்​பால் கெடா​வாலா மற்றும் இரு கூட்​டாளி​களு​டன் இணைந்து பர்​சா​னாவைக் கொலை செய்​துள்​ளனர். அதற்​குப் பிறகு பல ஆண்​டு​களாக அந்தக் குடும்பத்​தினர் குற்ற உணர்ச்​சி​யாலும், கொல்​லப்​பட்ட பெண்ணின் நிழல் தங்​களைத் துரத்​து​வ​தாக ஏற்​பட்ட மாயை யாலும் கடும் பீதி​யில் இருந்​துள்​ளனர்.

அந்த ஆவி​யிட​மிருந்து விடுபட அவர்​கள் மாந்​திரீகர்​களை நாடியுள்​ளனர். அந்த மாந்​திரீகர்​கள் சடங்​கு​கள் செய்​த​போது, 1992-ல் நடந்த இக்​கொலை குறித்த விவரங்​கள் கசிந்​து, இறு​தி​யில் அகம​தா​பாத் குற்​றப்​பிரிவு போலீ​ஸாரைச் சென்​றடைந்​துள்​ளது.

இதையடுத்​து, ஷம்​சுதீன் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் நடத்​திய விசா​ரணை​யின் அடிப்​படை​யில், பர்​சா​னாவை புதைத்த இடத்திலிருந்து அவருடைய எலும்​புக்​கூட்டை தோண்டி எடுத்துள்ளனர். டிஎன்ஏ பரிசோதனை​யில் அது பர்​சா​னா​வின் எலும்​புக்​கூடு என தடய​வியல் சோதனை​யில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்​து, ஷம்​சுதீன் முசாஜி கெடா​வாலா (61) மற்​றும் இக்​பால் முசாஜி கெடா​வாலா (63) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். அப்​துல் கரீம் யாகூப்ஜி ஜவரா​வாலா மற்​றும் ஷாலி​யாபிபி சமுட்​கான் பதான் ஆகிய இரு​வர் மீதும் வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.1,700 கோடி இழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in