மாநிலங்களவை எம்.பி. ஆக நிதிஷ் குமார் ஒப்புக்கொண்டது எப்படி?

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

Updated on
2 min read

புதுடெல்லி: கடந்த 2005 முதல் 20 வருடங்​களாக 10 முறை பிஹார் முதல்​வ​ராக தொடர்​பவர் நிதிஷ் கு​மார். ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு) தலை​வ​ரான அவர் மாநிலங்​களவை உறுப்​பின​ராக தேர்​வாக உள்​ளார்.

நிதிஷ் குமாருக்கு நெருக்​க​மான அதி​காரி​களின் கூற்​றுப்​படி, நிதிஷின் ராஜினாமா முடிவுக்கு பல அடிப்​படை காரணங்​கள் இருப்​ப​தாக தெரி​கிறது. வயது ​மூப்​பால் அவரது உடல்​நிலை​யில் ஏற்​பட்ட பாதிப்பு இந்த முடிவுக்கு முக்​கிய காரண​மாகி விட்​டது. கடந்த வருடம் தேர்​தல் பிரச்​சாரத்​தில் சிலசம​யம் தான் எதற்​காக அங்கு வந்​தோம் என்​பதே முதல்​வர் நிதிஷ் மறந்​து​விட்ட நிலை​யும் ஏற்​பட்​டுள்​ளது.

மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், நிதிஷ் குமார் தனது உடல்​நிலை​யின் உண்மை நிலையை ஒரு கட்​டத்​தில் உணர்ந்து முதல்​வர் பதவியி​லிருந்து வில​கத் தருணம் பார்த்​துள்​ளார். இறு​தி​யில் கவுர​மாக பதவி விலக அவருக்கு மாநிலங்​களவை தேர்​தல் சாதக​மாகி விட்​டது.

நிதிஷுடன் அரசி​யலில் நுழைந்த அவரது சகாக்​களான ராஷ்டிரிய ஜனதா தளத்​தின் லாலு​வும், பாஜக​வின் மறைந்த பிஹார் துணை முதல்​வர் சுசில் குமார் மோடி​யும் மாநிலங்களவை உறுப்​பின​ராக இருந்​துள்​ளனர்.

எனவே தானும் அப்​ப​தவி வகிக்க விரும்​புவ​தாக பொது​மேடைகளி​லும் நிதிஷ் வெளிப்​படுத்தி உள்​ளார். இதனால் இந்த முடிவை எடுத்​ததன் மூலம் நிதிஷ் தன் அரசி​யல் வாழ்​வைக் காப்​பாற்​றிக் கொண்​டார் என்றே கருதப்​படு​கிறது.

பிஹாரில் அதி​கார மாற்​றத்​துக்​கான திட்​டத்தை தயாரிக்க நிதிஷ் குமாருக்கு பாஜக உதவியது. இதற்​காக அவர், பாஜக தலை​மை​யுடன் தொடர்ந்து பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டிருந்​தார். இதில் முடி​வான திட்​டத்​தின்​படி, நிதிஷ்கு​மாரின் பதவி வில​கல் பிஹாரில் அதிர்வை கிளப்​பும் என எதிர்​பார்க்​கப்​பட்​டது.

இந்த உணர்​வு​களை மதிக்​கும் வகை​யில் அவரது மகன் நிஷாந்த் குமாரை அரசி​யலில் இறக்க நிதிஷ் சம்​ம​தித்​துள்​ளார். மகன் நிஷாந்தை ஜேடியு உறுப்​பின​ராக்கிய பிறகு சட்​டப்​பேரவை அல்​லது சட்​டமேல​வை​யில் அமர வைப்​பது என உடன்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. முதல்​வர் மாற்​றத்​தில் ஜேடியு சார்​பில் 2 துணை முதல்​வர்​கள் அமர்த்​தப்​படு​வார்​கள். இவர்​களில் ஒரு​வ​ராக நிஷாந்த் குமார் இருப்​பார்.

பாஜக யாரை முதல்​வ​ராக்​கி​னாலும் அதற்கு நிதிஷ் குமாரின் ஒப்​புதல் அவசி​ய​மாக்​கப்​பட்டு உள்​ளது. எனினும், பிஹாரில் இனி பாஜக​தான் மூத்த சகோ​தர் பங்கு வகிக்​கும்.

இதனிடையே, மாநிலங்​களவை தேர்​தல் முடிவு​களுக்கு பிறகு நிதிஷ்கு​மார் டெல்​லிக்கு குடிபெயரும் எண்​ணத்​தில் இல்லை எனத் தெரி​கிறது. பாட்​னா​வில் தற்​போது அவர் தங்​கி​யுள்ள அரசு குடி​யிருப்​பிலேயே தொடர்​வார். பிஹார் அரசி​யலிலும் தொடர்ந்து பங்​கெடுப்​பார். நாடாளு​மன்​றக் கூட்​டத்​தொடரின் போது மட்​டுமே அவர் டெல்​லிக்​குச் சென்று வரு​வார். மேலும், உடல்​நலக் குறைவு காரண​மாக அவை​யில் இருந்து நீண்ட விடுப்பு எடுக்​க​வும் வாய்ப்பு உள்​ளது.

பாட்​னா​வில் தங்​கியபடி நிதிஷ் தன் மகனுக்கு அரசி​யலின் நுணுக்​கங்​களை கற்​பிக்க விரும்​புவ​தாக கருதப்​படு​கிறது. துணை முதல்​வ​ராகும் மகன் நிஷாந்​தின் கடமை​களுக்கு அவரைத் தந்தை தயார்​படுத்​தும் வாய்ப்​பு​கள் உள்​ளன. இருப்​பினும், நிதிஷின் உடல்​நிலை​யில் ஏற்​படும் மாற்​றங்​களி​னால்​ அவர்​ எவ்​வளவு காலம்​ மகனுக்​கு உதவ முடி​யும்​ என்​பது மிகப்​பெரிய கேள்​வி​யாக உள்​ளது.

<div class="paragraphs"><p>நிதிஷ் குமார்</p></div>
தெலங்கானா முதல்வர் முன்னிலையில் 130 நக்சலைட்டுகள் சரண்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in