டிஜிட்டல் மோசடிகளில் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான வழிகாட்டு நெறிகளை 4 வாரத்தில் வகுக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடிகளில் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான வழிகாட்டு நெறிகளை 4 வாரத்தில் வகுக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: டிஜிட்டல் மோசடிகளில் தொடர்​புடைய வங்​கிக் கணக்​கு​களைக் கையாள்​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை 4 வாரங்​களுக்​குள் வகுக்க வேண்​டும் என்று ரிசர்வ் வங்​கிக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பான வழக்கை நேற்று விசா​ரித்த உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போலி வங்கி கணக்​கு​கள், பண மோசடி மற்​றும் இணை​ய​வழி மோசடிகளு​டன் தொடர்​புடைய வங்கி கணக்​கு​களைக் கையாள்வதற்​கான நிலை​யான செயல்​பாட்டு நடை​முறையை நான்கு வாரங்​களுக்​குள் ரிசர்வ் வங்கி தயாரித்து வழங்க வேண்டும்.

டிஜிட்​டல் கைது முறை​கேடு விவ​காரத்​தில் குறைதீர்ப்​பு, பண மீட்பு நடவடிக்​கைகளை விரை​வாக மேற்​கொள்ள வேண்​டும். இதற்கு தேவை​யான நடவடிக்​கைகளை அனைத்து மாநில அரசுகளும், விசா​ரணை அமைப்​பு​களும், சட்ட அமலாக்க முகமைகளும் மேற்​கொள்ள வேண்​டும். டிஜிட்​டல் மோசடி குறித்து புகார் அளிக்க பொது மக்​களிடையே விழிப்​புணர்வை ஏற்​படுத்த வேண்டும்.

அனைத்து மாநில அரசுகளும் சைபர் குற்ற ஒருங்​கிணைப்பு மையங்​களை அமைக்க வேண்​டும். இ-ஜீரோ எப்.ஐ.ஆர் வழி​முறையைக் கடைப்​பிடிக்க வேண்​டும். டிஜிட்​டல் மோசடி தொடர்பான வங்​கிக் கணக்​கு​களை விரைந்து முடக்க வேண்​டும். மோசடி செய்​யப்​பட்ட பணத்தை விரைந்து மீட்க வேண்​டும். வங்கி கணக்கு முடக்க வழக்​கு​களின் விசாரணையை எளி​தாக்க வேண்டும்.

டிஜிட்​டல் கைது மோசடி​யால் பாதிக்​கப்​பட்​டோர் இழப்​பீடு பெறு​வதற்​கான கட்​டமைப்பை ஏற்​படுத்த வேண்​டும். டிஜிட்​டல் கைது மோசடிகள் தொடர்​பாக சிபிஐ விசா​ரணை மேற்​கொள்ள வரையறுக்​கப்​பட்​டுள்ள ரூ.10 கோடி என்ற வரம்​பைக் குறைக்க வேண்​டும். டிஜிட்​டல் மோசடி தொடர்​பாக இது​வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்​கைகள் குறித்து செப். 16-க்​குள் அனைத்து மாநில அரசுகள், மத்​திய அரசு, சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள்​ உத்​தர​விட்​டனர்​.

டிஜிட்டல் மோசடிகளில் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான வழிகாட்டு நெறிகளை 4 வாரத்தில் வகுக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in