முகப்பு விளக்கு செயலிழந்ததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

முகப்பு விளக்கு செயலிழந்ததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் கலபுரகி மாவட்​டத்தை சேர்ந்தவர் ஹனு​மந்த் ராயப்பா (43). அரசு பேருந்​தின் ஓட்​டுந​ரான இவர் கடந்த சனிக்​கிழமை இரவு 8.30 மணிக்கு கலபுரகி​யில் இருந்து 84 கி.மீ தொலை​வில் உள்ள‌ சின்​சோலிக்கு அரசு பேருந்தை இயக்​கி​னார்.

சின்​சோலியை அடைய 6 கிமீ தூரம் இருந்த நிலை​யில் பேருந்​தின் முகப்பு விளக்​கு​கள் திடீரென செயலிழந்​தன. இதனால் நடத்​துநர் மஞ்​சு​நாத் பேருந்​தில் நின்​ற​வாறு செல்​போன் டார்ச் லைட்டை ஒளிரச் செய்ய, அதன் வெளிச்​சத்​தில் ஓட்​டுநர் ஹனு​மந்த் ராயப்பா இடை​வி​டா​மல் பேருந்தை இயக்​கி​னார்.

குண்​டும் குழி​யு​மான சாலை​யில் செல்​போன் டார்ச் வெளிச் சத்தில் பேருந்தை இயக்​கியதை பயணி ஒரு​வர் வீடியோ​வாக பதிவு செய்​து, சமூக வலைத் ​தளத்​தில் பகிர்ந்​தார். இந்த வீடியோ இணை​யத்​தில் வெளி​யாகி கர்​நாடக அரசி​யலில் சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது.

இது குறித்து எதிர்க்​கட்சி தலை​வர் ஆர்​.அசோகா கூறுகை​யில், “காங்​கிரஸ் அரசின் தோல்வி அப்​பட்​ட​மாக தெரி​கிறது. கல்​யாண கர்​நாட​கா​வில் போது​மான பேருந்​துகள் இல்​லாத நிலை​யில், மக்கள் அன்​றாடம் தங்​களின் உயிரைப் பணயம் வைத்தே அரசு பேருந்​துகளில் பயணிக்​கின்​றனர். இந்த நிலை மாற்​றப்பட வேண்டும்​” என்​றார்​.

முகப்பு விளக்கு செயலிழந்ததால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
தவெக தலைமையில் கூட்டணி உருவானால் விசிக இடம்பெறும்: திருமாவளவன் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in