மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது: 142 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் மாலை வெளியாகும்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று தொண்டர் ஒருவரின் ஸ்கூட்டரில் பயணித்தபடி இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். படம்: பிடிஐ

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று தொண்டர் ஒருவரின் ஸ்கூட்டரில் பயணித்தபடி இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். படம்: பிடிஐ

Updated on
2 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் இறுதிக்கட்ட தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்​றுடன் முடிவடைந்​தது. அங்கு 142 தொகு​தி​களில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய 4 மாநிலங்​கள், புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​ கணிப்​பு​கள்​ வெளியாகின்​றன.

மேற்கு வங்க மாநில சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​.23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறும் என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. குறிப்பாக திரிணமூல் - பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இங்கு மொத்​தம் 294 தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 152 தொகு​தி​களுக்கு கடந்த 23-ம் தேதி முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர். அவர்​களுக்​காக 44,376 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டிருந்​தன. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கியது. அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் காலை முதலே பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து வாக்​குரிமையை செலுத்​தினர்.

93.19 சதவீத வாக்குப்பதிவு: கடந்த கால மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதை தடுக்க மத்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 2.4 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களோடு மாநில போலீஸாரும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகு​தி​களில் நாளை இறுதிக்கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இந்த தொகு​தி​கள் கொல்​கத்தா வடக்​கு, கொல்​கத்தா தெற்​கு, ஹவு​ரா, நாடி​யா, வடக்கு 24 பர்​கானாஸ், தெற்கு 24 பர்​கானாஸ், ஹூக்ளி மற்​றும் புர்தா பர்​தாமன் ஆகிய 8 மாவட்​டங்​களில் உள்​ளது.

தலைவர்கள் தீவிர பிரச்சாரம்: இந்​நிலை​யில் இங்கு இறு​திக்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரம் நேற்​றுடன் நிறைவு பெற்​றது. இதனால் அரசி​யல் கட்சி தலை​வர்​கள் தீவிர பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர். முதல்​வர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகு​தி​யான பவானிப்​பூரில் நடைப்​பயணம் மேற்​கொண்​டும், ஸ்கூட்​டரில் பயணம் செய்​தும் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி ரானா​காட், ஹூக்​ளி, அராம்​பாஷ், மகேஷ்தலா ஆகிய இடங்​களில் கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து பிரச்​சா​ரம் செய்​தார்.

பிரதமர் மோடி ஜகத்​தால் பகு​தி​யில் ஜிலேபி மத் என்ற இடத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசி​னார். வடக்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டம், பரக்​பூரில் நேற்று காரில் பேரணி சென்று பிரச்​சா​ரம் செய்​தார். மத்​திய அமைச்​சர் அமித்ஷா பெஹலா தானா முதல் மான்​டன் வரை​யும், அதன் பிறகு ஹூக்​ளி​யிலும் சாலைப் பேரணி சென்​றார். மாலை 6 மணி​யுடன் இறு​திக்​கட்ட தேர்​தல் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது.

மாநிலத்​தில் உள்ள 142 தொகு​தி​களுக்​கும் நாளை இறு​திக்​கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. வாக்​குப்​ப​திவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறுகிறது.

ஆணையத்திடம் 800 புகார்கள்: ​முதல் கட்ட வாக்​குப்​ப​தி​வின்​போது வன்​முறை சம்​பவங்​கள், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யத்​திடம் 700-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் அளிக்​கப்​பட்​டன. வாக்​காளர்​களைத் தாக்​கியது, கட்சி சார்​பில் அமைக்​கப்​பட்ட பந்​தல்​களை உடைத்​தது தொடர்​பாக சிஆர்​பிஎப் போலீ​ஸாருக்கு எதி​ராக 100 புகார் மனுக்​கள் அளிக்​கப்​பட்​டன. இவற்றை கருத்​தில் கொண்​டு, தற்​போது இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​தி​வில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தேர்​தல் முடிந்​ததும் மாலை தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய 4 மாநிலங்​கள், புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய​வற்​றின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக் கணிப்​பு​கள் வெளியாகின்​றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in