மே.வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு

மே.வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில 2-ம் கட்​டத் தேர்​தலில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​த​தாக புகார் எழுந்​தது.

டைமண்ட் ஹார்​பர் மற்றும் மகரஹட் பஸ்​சிம் தொகு​தி​களில், வாக்​காளர்​களின் சட்டைப்பையில் ரகசிய கேம​ராவை பொருத்​தி, அவர்​கள் யாருக்கு வாக்​களிக்​கின்​றனர் என்​ப​தைக் கண்​காணிக்க முயற்சி நடந்​த​தாக கூறப்​பட்​டது அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. அந்த வகை​யில், 77 வாக்​குச்​சாவடிகளில் மறு வாக்​குப்​ப​திவு நடத்த வேண்​டும் என்று அரசி​யல் கட்​சிகள் கோரிக்கை வைத்​தன.

இதைத் தொடர்ந்​து, தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உத்​தர​வின்​பேரில், சம்​பந்​தப்​பட்ட வாக்​குச் சாவடிகளில் சிறப்பு பார்​வை​யாளர் சுப்​ரதா குப்தா ஆய்வு நடத்​தி​னார். அதன் அடிப்​படை​யில், 15 வாக்​குச்​சாவடிகளில் மறு வாக்​குப்​ப​திவு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இது குறித்து தேர்​தல் ஆணையம் வெளி​யிட்​டுள்ள உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: மேற்கு வங்​கத்​தில் 2-ம் கட்​டத் தேர்​தலின்​போது மகரஹட் பஸ்​சிம், டைமண்ட் ஹார்​பர் தொகு​தி​களில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​த​தாக சம்​பந்​தப்​பட்ட தொகு​தி​களின் தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள், பார்​வை​யாளர்​களிடம் இருந்து புகார்​கள் வந்​தன.

அந்த புகார்​கள் மற்​றும் கள நில​வரங்​கள் குறித்து ஆய்வு செய்​துள்ள தேர்​தல் ஆணை​யம், மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1951, பிரிவு 58(2)-ன் கீழ் வழங்​கப்​பட்​டுள்ள அதி​காரத்​தைப் பயன்​படுத்​தி, குறிப்​பிட்ட 15 வாக்​குச்​சாவடிகளில் ஏப்​.29-ம் தேதி நடை​பெற்ற வாக்​குப்​ப​திவு செல்​லாது என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, மகரஹட் பஸ்​சிம் தொகு​தி​யில் 11 வாக்​குச்​சாவடிகளி​லும், டைமண்ட் ஹார்​பர் தொகு​தி​யில் 4 வாக்​குச்​சாவடிகளி​லும் மே 2-ம் தேதி (இன்​று) மறு வாக்​குப்​ப​திவு நடத்த ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இதற்​கான விரி​வான வழி​காட்​டு​தல்​களை அந்​தந்த மாவட்ட நிர்​வாகங்​களுக்கு மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி அனுப்​பி​யுள்​ளார். மறு வாக்​குப்​ப​திவு 2-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடை​பெறும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

மே.வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு
ஜபல்பூர் படகு விபத்தில் பரிதாபம்: திருச்சியை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in