புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் நியமனம்

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: ராணுவத்​தின் அடுத்த தளப​தி​யாக லெப்​டினன்ட் ஜெனரல் தீரத் சேத் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளார். இவர் ஜுன் 30-ம் தேதி பதவி ஏற்​றுக்​கொள்​கிறார்.

ராணுவத் தளப​தி​யாக இருக்​கும் ஜெனரல் உபேந்​திர திவிவேதி இம்​மாத இறு​தி​யில் ஓய்வு பெறுகிறார். இதைடுத்து ராணுவ துணைத் தளப​தி​யாக இருக்​கும் லெப்​டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்தை புதிய தளப​தி​யாக மத்​திய அரசு நியமித்​துள்​ளது.

ராணுவத்​தில் சுமார் 40 ஆண்டு கால​மாக பணி​யில் இருக்​கும் தீரஜ் சேத், பல பிரிவு​களில் உயர் அதி​காரி​யாக பணி​யாற்​றிய​வர். இவர் கடந்த 1986-ம் ஆண்டு ராணுவத்​தின் பீரங்கி படைப்​பிரி​வில் அதி​காரி​யாக சேர்ந்​தார். காஷ்மீரில் தீவிர​வாத ஒழிப்பு பணி​யிலும் ஈடு​பட்​டுள்​ளார்.

லெப்​டினன்ட் ஜென​ராலாக பதவி உயர்வு பெற்​ற பின் இவர், ராணுவத்​தின் வான் பாது​காப்பு பிரி​வான சுதர்ஸன சக்கர படைப்​பிரிவுக்கு தலைமை தாங்​கி​னார். தென்​மேற்கு மற்​றும் தென் மண்​டலங்​களி​லும் இவர் தலைமை அதி​காரி​யாக பணி​யாற்​றி​யுள்​ளார்.

அங்​கோலா நாட்​டில் ஐ.நா படை அதி​காரி​யாக​வும் பணி​யாற்​றி​யுள்​ளார். பிரான்ஸின் பாரீஸில் இவர் ராணுவ உயர் அதி​காரி பயிற்​சி​யில் பங்​கேற்​றுள்​ளார்.

புதிய ராணுவ தளபதியாக தீரஜ் சேத் நியமனம்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ராகுல் காந்தி 17 முதல் நாடு முழுவதும் பிரச்சாரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in