நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ராகுல் காந்தி 17 முதல் நாடு முழுவதும் பிரச்சாரம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: சிபிஎஸ்இ தேர்வு குளறு​படிகள், நீட் வினாத்​தாள் கசிவுப் பிரச்​சினை​களுக்கு எதி​ராக, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி ஜூன் 17-ம் தேதி நாடு தழு​விய பிரச்​சா​ரத்​தைத் தொடங்க உள்​ளார்.

கடந்த மே மாதம் நடை​பெற்ற நீட் வினாத்​தாள் கசிந்​தது. இதையடுத்​து, அந்​தத் தேர்வு ரத்து செய்​யப்​பட்டு ஜூன் 21-ல் மறு தேர்வு நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது​போல சிபிஎஸ்இ விடைத்​தாள் மதிப்​பீட்​டிலும் குளறு​படி நடந்​த​தாக புகார் எழுந்​துள்​ளது.

இந்​நிலை​யில், காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் நேற்று கூறிய​தாவது: தேர்வு முறை​கேடு​கள், நீட் வினாத்​தாள் கசிவுப் பிரச்​சினை​களுக்கு எதி​ராக, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி ஜூன் 17-ம் தேதி நாடு தழு​விய பிரச்​சா​ரத்தை ராஜஸ்​தான் மாநிலம் கோடா நகரில் தொடங்க உள்​ளார். இதையடுத்​து, அலகா​பாத் (ஜூலை 10), பாட்னா (ஜூலை 10), டெல்லி (ஜூலை 14) ஆகிய இடங்​களில் மாணவர் மாநாடு​களை நடத்த உள்​ளார். இது வினாத்​தாள் கசி​வால் பாதிக்​கப்​பட்ட லட்​சக்​கணக்​கான தேர்​வர்​கள், கல்​வி​யாளர்​கள் மற்​றும் இளைஞர் அமைப்​பு​களை ஒன்​றிணைக்​கும்.

வினாத்​தாள் கசிவால் இளைஞர்​கள் எதிர்​கொள்​ளும் இன்​னல்​களை வெளிச்​சம் போட்​டுக் காட்​டு​வதே இப்​பிரச்​சா​ரத்​தின் நோக்​க​மாகும். என்​.எஸ்​.​யு.ஐ மற்​றும் இளைஞர் காங்​கிரஸ் மூலம் நாடு முழு​வதும் நேரடி மற்​றும் டிஜிட்​டல் பரப்​புரைகள், கல்வி நிறு​வனங்​களில் கலந்​துரை​யாடல்​கள் நடத்​தப்​படும்.

அரசி​யல் தொடர்​பு​களுக்கு அப்​பாற்​பட்டு மாணவர்​களை ஒன்​றிணைத்​து, தேர்​வுத் தோல்வி​களுக்​குப் பொறுப்​பேற்க வலி​யுறுத்த இந்த இயக்​கம் ஒரு தளமாக அமை​யும்.

நீட் தேர்​வைப் பரவலாக்​குதல், தேர்​வுக்​கான கட்​ட​ணங்​களை ரத்து செய்​தல் மற்​றும் வினாத்​தாள் கசிவு மோசடிகளுக்​குப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் ராஜி​னாமா செய்​யக் கோரு​வது போன்ற கோரிக்​கைகளை இந்த இயக்​கம் வீதி​களுக்​குக் கொண்டு செல்​லும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>ராகுல் காந்தி</p></div>
விமான கழிப்பறையில் மறைத்து ரூ.4.26 கோடி தங்கம் கடத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in