“10 நிமிடமாக உதவிகேட்டு கூச்சலிட்டான் என் மகன்” - விபத்தில் உயிரிழந்தவரின் தாய் குற்றச்சாட்டு

“10 நிமிடமாக உதவிகேட்டு கூச்சலிட்டான் என் மகன்” - விபத்தில் உயிரிழந்தவரின் தாய் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யின் துவாரகா பகு​தி​யில் கடந்த 3-ம் தேதி அதிவேக​மாக சென்ற கார் மோதியதில் இருசக்கர வாக​னத்​தில் பய ணித்த சாஹில் தனேஷ்ரா (23) உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து சாஹில் தாய் இன்னா மக்​கான் நேற்று கூறும்​போது, “என் மகன் விபத்​தில் சிக்​கிய​தாக தகவல் கிடைத்​ததும் பதறியடித்​துக் கொண்டு ஓடினேன். அப்​போது என் மகன் சாலை​யில் கிடந்​தான்.

அவன் படு​காயமடைந்து சுமார் 10 நிமிடங்​கள் வலி​யால் துடித்​திருக்​கிறான். உதவி கேட்டு கூச்​சலிட்​டிருக்​கிறான். அங்கே ஆம்​புலன்ஸ் இருந்​தும் அவனை மருத்​து​வனைக்கு உடனே அழைத்​துச் செல்​ல​வில்​லை” என்​றார்.

இந்த விபத்தை ஏற்​படுத்​திய காரை ஓட்​டியது ஒரு சிறு​வன் என்றும் அவனிடம் உரிமம் இல்​லை என்றும் தெரியவந்துள் ளது. அந்​தக் கார் ஏற்​கெனவே 13 முறை விதி​முறை​களை மீறியது தொடர்​பான அபராத சீட்​டு​கள் (சலான்) நிலு​வை​யில் உள்​ளது.

“10 நிமிடமாக உதவிகேட்டு கூச்சலிட்டான் என் மகன்” - விபத்தில் உயிரிழந்தவரின் தாய் குற்றச்சாட்டு
மத்திய அரசு நிறுவனம் கண்டுபிடித்த புரோட்டீன் நிறைந்த ‘டிசைனர் அரிசி’ - தனியார் மூலம் விரைவில் சந்தையில் அறிமுகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in