15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும்? - டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் கேள்வி

15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும்? - டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் கேள்வி
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் மறு​தேர்வு வரை டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்​டதன் மூலம், 15 கோடி பயனாளர்​களின் உரிமைகளை எப்​படி தடுக்க முடி​யும்? என டெல்லி உயர்​நீதிமன்றம் மத்​திய அரசுக்கு கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

நீட் வினாத்​தாள் டெலிகி​ராம் செயலி மூலம் கசிந்​தது விசாரணையில் தெரிய​வந்​த​தால், நீட் மறு​தேர்வு வரும் 22ம் தேதி முடி​யும் வரை டெலிகி​ராம் செயலிக்கு மத்​திய அரசுத் தடை விதித்​தது. இதை எதிர்த்து டெல்லி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் டெலிகிராம் செயலி நிறு​வனத்​தில் சார்​பில் மனு தாக்​கல் செய்யப்பட்​டது. இந்த மனுவை நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தார்.

மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகை​யில், ”டெலிகி​ராம் செயலி​யின் ஒரு பயனாளர் 40 பாட் கணக்​கு​களை உரு​வாக்க முடி​யும். ஆனால் வாட்ஸ் அப் செயலியில் ஒரு கணக்கை மட்​டுமே உரு​வாக்க முடி​யும். டெலிகிராமில் உரு​வாக்​கப்​படும் பாட் வாயி​லாகத் தகவல்​களை மொத்​த​மாகப் பகிர முடி​யும். வாட்ஸ் அப் செயலி, ஃபேஸ்​புக் போன்​றவற்​றில் இத்​தகைய பிரச்​சினை இல்​லை.

மேலும் டெலிகி​ராம் செயலி கிளவுட் தொழில் ​நுட்​பத்​தில் இயங்குவ​தால் ஒரு கணக்கை முடக்​கி​னால் கூட யாரோ ஒரு​வர் தொடர்ந்து அந்​தக் கணக்கை வேறு பெயரில் இயக்க முடி​யும். சிபிஐ, காவல்​துறை போன்ற அமைப்​பு​கள் அசல் பயனாளரைக் கண்​டு​பிடிக்க முடி​யாது. எனவேதான் டெலிகி​ராம் செயலி தற்காலிக​மாக முடக்​கப்​பட்​டுள்​ளது” என்றார்.

அப்​போது நீதிபதி தேஜஸ் கரி​யா,”குறிப்​பிட்ட மாணவர்​கள் தேர்வு எழுது​வதற்​காக 15 கோடி மக்​களின் உரிமை​களை எப்​படி தடுக்க முடி​யும் ? யாரோ ஒரு​வரின் உரிமை​களைப் பாது​காக்க யாரோ ஒரு​வரின் உரிமை​களை தடுக்க முடி​யு​மா, வினாத்​தாள் கசிவு தடுப்பு என்ற பெயரில் ஒட்​டுமொத்த செயலியை முடக்க முடியுமா, வினாத்​தாள் கசிவு வேக​மாகப் பரவும்​போது எப்​படி அதைத் தடுப்​பீர்​கள் ?” என்றார்.

இதற்​குப் பதில் அளித்த துஷார் மேத்​தா, ”அனு​ராதா பசின் வழக்கில் உச்​ச நீ​தி​மன்​றமே சமூக வலை ​தளங்​களை முடக்க அனு​ம​தித்து தீர்ப்பு அளித்​துள்​ளது. வினாத்​தாள் கசிவு விவகாரத்தில் கடுமை​யான பாதிப்பை ஏற்​படுத்​தி​ய​தால்​ தான் டெலிகி​ராம் செயலியை மத்​திய அரசு ஆழ்ந்த ஆலோ​சனைக்​குப் பிறகே முடக்​கி​யுள்​ளது. இதில் நீதி​மன்​றம் தலை​யிடக் கூடாது” என்று வாதிட்​டார்.

டெலிகி​ராம் செயலி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் துருவ் மேத்தா ஆஜராகி, ”அனு​ராதா பசின் வழக்​கில் உச்​ச நீ​தி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை இந்த விவ​காரத்​தில் பொருத்த முடி​யாது. டெலிகி​ராம் செயலிக்கு விதித்த தடை அடிப்​படை உரிமை​களை மீறு​வ​தாக உள்​ளது. இந்​தத் தடையை நீக்க உத்​தர​விட வேண்​டும்“ என்று வா​திட்​டார். இரு தரப்பு வாதங்​களைப் பதிவு செய்​து கொண்​ட நீதிப​தி தீர்ப்​பைத்​ தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​திவைத்​தார்​.

15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும்? - டெலிகிராம் தடை விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட் கேள்வி
மாநகராட்சியின் வாட்ஸ்-அப் சேவை வழியாக குடிநீர் கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in