‘மக்களவை இடங்களை 50% அதிகரிக்கும் திட்டத்தால் தெற்கு, மேற்கு மாநிலங்களுக்கு பாதிப்பு’

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு
காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம்

காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம்

Updated on
1 min read

புதுடெல்லி: மக்​களவை இடங்​களை 50% அதி​கரிக்​கும் திட்டத்துக்கு காங்​கிரஸ் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. இது தெற்​கு, மேற்கு மற்​றும் வடகிழக்கு மாநிலங்​களுக்கு பாதக​மாக அமை​யும் என்று அக்​கட்சி கூறி​யுள்​ளது.

இது குறித்து காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம் ரமேஷ் ‘எக்​ஸ்' தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: "மக்​களவை​யின் அளவை 50% அதி​கரிக்க மோடி அரசு ஒரு மசோ​தாவை வலுக்​கட்டாய​மாக நிறைவேற்ற திட்​ட​மிடு​கிறது. ஒவ்​வொரு மாநிலத்துக்​கும் ஒதுக்​கப்​படும் இடங்​களின் எண்ணிக்கையையும் 50 % அதி​கரிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அனைத்து மாநிலங்களிலும் 50 % இடங்​களை அதி​கரிப்​பது நியாய​மானது என்ற வாதம் ஏமாற்று வேலை​யாகும்.

தற்​போதைக்கு விகி​தாச்​சா​ரங்​கள் மாறாமல் இருக்​கலாம். ஆனால் புறக்​கணிக்க முடி​யாத தாக்​கங்​கள் இதில் உள்​ளன. உதாரண​மாக, தற்​போது உ.பி.​யில் 80 இடங்​களும், தமிழ்​நாட்​டில் 39 இடங்​களும் உள்​ளன. முன்​ மொழியப்​படும் மசோ​தா​வால், உ.பி.​யின் பலம் 120 ஆக உயரும். அதே​நேரத்​தில் தமிழ்​நாட்​டின் பலம் அதி​கபட்​ச​மாக 59 ஆக மட்​டுமே உயரும்.

இது​போல், கேரளா​வின் மக்​களவை இடங்​கள் 20-ல் இருந்து 30 ஆகவும், பிஹாரின் இடங்​கள் 40-ல் இருந்து 60 ஆகவும் அதிகரிக்கும். ஒட்​டுமொத்​த​மாக, தென்​னிந்​திய மாநிலங்​கள் 66 இடங்​களை​யும், வட மாநிலங்​கள் 200 இடங்​களை​யும் கூடுதலாகப்பெறும்.

தெற்​கு, வடகிழக்கு மற்​றும் மேற்​கில் உள்ள சிறிய மாநிலங்களுக்கு பாதக​மான ஒரு சட்​டத்தை பிரதமர் மோடி தன்னிச்​சை​யாக தயாரித்து வரு​கிறார். இது குறித்து தெலங்கானா முதல்​வர் ஏற்​கெனவே எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இந்த திட்​டம் அதி​காரப்​பூர்​வ​மாக அறிவிக்​கப்​படும் ​போது மற்றவர்​களும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்​புள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

அடுத்த மக்​கள​வைத் தேர்​தலிலும், அதைத் தொடர்ந்து நடைபெறும் சட்​டப்​பேரவை தேர்​தல்​களி​லும், மொத்த இடங்​களில் 33% பெண்​களுக்கு ஒதுக்​கீடு செய்​யும் திட்​டத்தை செயல்​படுத்​தும் வகை​யில் 2 மசோ​தாக்​களை நாடாளு​மன்​றத்​தின் தற்​போதைய கூட்​டத்​ தொடரில் மத்​திய அரசு அறி​முகப்​படுத்​தலாம் என கூறப்படு​கிறது. இந்த மசோ​தா​வின்​படி, மக்​களவை இடங்​களின் எண்​ணிக்கை தற்​போதுள்ள 543-ல் இருந்து 50% அதி​கரித்து 816 ஆக உயரும்.

<div class="paragraphs"><p>காங்​கிரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ஜெய்​ராம்</p></div>
நீர்மூழ்கிகளை அழிக்கும் போர்க் கப்பல் ‘ஐஎன்எஸ் மால்வன்’ கடற்படையிடம் ஒப்படைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in