அயோத்தி ராமர் கோயிலில் திருடிய பணத்தில் காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த குற்றவாளி

அவி​னாஷ் சுக்​லா

அவி​னாஷ் சுக்​லா

Updated on
1 min read

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் இது​வரை 8 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர். அவர்களில் அவி​னாஷ் சுக்​லா​வும் ஒரு​வர். சிறப்பு புல​னாய்வு போலீ​ஸார், அவரிடம் தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இது தொடர்​பாக போலீஸ் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: உத்தர பிரதேசம் மகேஷ்கஞ்ச் அருகே உள்ள பாபுபூர் நாரி​யாவா கிராமத்தை சேர்ந்த அவி​னாஷ் சுக்லா, ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்​கில் முக்​கிய குற்​ற​வாளி​யாக அடையாளம் காணப்​பட்டு உள்​ளார். கடந்த சில ஆண்​டு​களாக இவர் காணிக்கை எண்​ணும் பிரி​வில் பகு​திநேர​மாக பணி​யாற்றி உள்​ளார். திருடிய காணிக்கை பணத்தில் இருந்து தனது குடும்பத்தினர் மற்​றும் உறவினர்​களுக்கு ரூ.19 லட்​சத்தை வழங்கி உள்​ளார். தனது அண்​ணன் திரு​மணத்​துக்கு அவர் ரூ.6 லட்​சத்தை அன்​பளிப்​பாக வழங்​கி​யிருக்​கிறார்.

தனது காதலிக்கு அண்​மை​யில் அவர் ஐ போன் வாங்​கிக் கொடுத்துள்​ளார். அத்துடன் அன்​பளிப்​பாக ரூ.2.5 லட்​சத்தை வழங்​கி​யிருக்​கிறார். வங்​கிக் கணக்​கு​கள் மூல​மாக பணம் கைமாறி​யிருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்டு உள்​ளது. அயோத்தி மற்றும் சுற்று வட்​டார பகு​தி​களில் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்​களில் பல்​வேறு சொத்​துகளை வாங்கியிருக்​கிறார். இதுதொடர்​பாக தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறோம். அவர் புதி​தாக ஒரு கார் வாங்கி உள்​ளார்.

அவரிடம் இருந்து ரூ.20.39 லட்​சம் ரொக்​கம், ரூ.1.06 லட்​சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் மற்​றும் தங்கம், வெள்ளிப் பொருட்களை பறி​முதல் செய்​திருக்​கிறோம். மேலும் அவி​னாஷ் சுக்​லா, தனது சொந்த கிராம​மான பாபுபூர் நாரி​யா​வா​வில் காணிக்கை திருட்டு பணத்தில் பிரம்​மாண்ட வீட்டை கட்டி உள்ளார். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

<div class="paragraphs"><p><em>அவி​னாஷ் சுக்​லா</em></p></div>
முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற அனுமதி: திமுகவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in