முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற அனுமதி: திமுகவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற அனுமதி: திமுகவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்
Updated on
2 min read

சென்னை: முதல்​வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்​கக் கோரி திமுக தாக்​கல் செய்த மனுவை வாபஸ் பெற அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இதுதொடர்​பான வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மை​யில் சிபிஐ விசா​ரித்து வரு​கிறது.

இந்​நிலை​யில், வரும் 10-ம் தேதி கரூர் செல்​லும் முதல்​வர் விஜய், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரிவிக்க உள்​ளார். அப்​போது, தவெக சார்​பில் தலா ரூ.2 லட்​சம் நிதி​யுதவி வழங்​க​வுள்​ளார்.

இதற்​கிடை​யில், கரூர் சம்​பவம் தொடர்​பாக அமைச்​சர் ஆதவ் அர்ஜுனா சில கருத்​துகளைத் தெரி​வித்​திருந்​தார். அதற்கு எதிர்ப்பு தெரி​வித்து திமுக அமைப்பு செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் இடை​யீட்டு மனு தாக்​கல் செய்யப்பட்​டது.

அந்த மனு​வில், “ஜூலை 10-ம் தேதி கரூர் செல்​லும் முதல்​வர் விஜய், பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு அரசு வேலைக்​கான உத்​தரவு மற்​றும் கருணைத் தொகை வழங்க இருப்​ப​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. முதல்​வர் விஜய் கரூர் செல்​வது, சிபிஐ விசா​ரணை​யைப் பாதிக்​கும். இந்த வழக்கு விசா​ரணை முடி​யும் வரை முதல்​வர் மற்​றும் அமைச்​சர்​கள் பொது​வெளி​யில் கருத்து தெரிவிக்க தடை விதிக்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் கே.​வி.​விஸ்​வ​நாதன், அலோக் ஆராதே அமர்வு முன்​னிலை​யில் நேற்று வந்​தது. திமுக சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ரஞ்​சித் குமார் ஆஜராகி, கரூர் வழக்கு விசா​ரணை​யில் இருக்​கும் நிலை​யில், தமிழக அமைச்​சர்​கள் பொது​வெளி​யில் கருத்​துகளைத் தெரி​வித்து வரு​கின்​றனர். இது உச்ச நீதி​மன்ற உத்​தரவை மீறு​வ​தாகும். அவர்​கள் மீது சிபிஐ விசா​ரனைக்கு உத்​தர​விட வேண்​டும். வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள முதல்​வர் விஜய் உள்​ளிட்​டோர் நிவாரணம் வழங்​குதல் போன்ற விஷ​யங்​களை வெளிப்​படை​யாகவே செய்​கின்​றனர். வழக்​கில் சாட்​சிகளும், ஆதா​ரங்​களும் பாதிக்​காமல் இருக்​கும் வகை​யிலும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு வழங்​கும் நலத்​திட்​டங்​களை சிபிஐ​யிடம் தாக்​கல் செய்​து​விட்​டு, உச்ச நீதி​மன்​றம் வகுக்​கும் விதி​களின்​படி​யும் வழங்க உத்​தர​விட வேண்​டும்” என்று வாதிட்​டார்.

முதல்​வர் விஜய், அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜுனா சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “கரூர் வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் தற்​போது அமைச்​சர்​களாக உள்​ளனர். முதல்​வர் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வ​ராக இல்​லை’’ என்று வாதிட்​டார்.

அப்​போது, திமுக வழக்​கறிஞரைப் பார்த்து நீதிப​தி​கள், “கருத்​துரிமைக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதிக்க வேண்​டு​மா? கருத்தை கருத்​தால் எதிர்​கொள்​ளுங்​கள். ஒரு முதல்​வரின் செயல்​பாட்​டுக்கு உச்ச நீதி​மன்​றம் எப்​படி கட்​டுப்​பாடு​கள் விதிக்க முடி​யும். சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட்ட வழக்​கில், எதிர்க்​கட்​சி​யின் மனுவை ஏற்று உத்​தர​வுக்கு மேல் உத்​தரவை எப்​படி உச்ச நீதி​மன்​றம் பிறப்​பிக்​கும். கரூர் துயர சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்​குக் கருணைத் தொகை வழங்​கு​வது எப்​படி விசா​ரணையை பாதிக்​கும்.

கரூர் தொடர்​பான முதல் தகவல் அறிக்​கை​யில் (எப்​ஐஆர்) விஜய் பெயர் இல்​லை. இந்த விவரத்தை சரி பாருங்​கள். உச்ச நீதி​மன்​றம் அமைத்​துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்​தோகி தலை​மையி​லான கண்​காணிப்பு குழு​விடம் முறை​யிடுங்​கள். நீதி​மன்ற உத்​தரவை மீறி​னால் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு மட்​டுமே தாக்​கல் செய்ய முடி​யும். உங்​களது அரசி​யல் சார்ந்த சண்​டைகளை நீதி​மன்​றத்​துக்கு வெளியே வைத்து கொள்​ளுங்​கள். இப்​போது இந்த மனுவை வாபஸ் பெறுகிறீர்களா அல்லது தள்​ளு​படி செய்யலாமா?” என்று தெரி​வித்​தனர்.

இதனை தொடர்ந்து, வழக்கை வாபஸ் பெற்​றுக் கொள்​வ​தாகத் திமுக வழக்​கறிஞர் தெரி​வித்​தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிப​தி​கள், வழக்கை வாபஸ் பெற அனு​ம​தித்து விசாரணையை முடித்து வைத்​தனர்​.

இதையடுத்து முதல்​வர்​ விஜய்​​ 10-ம்​ தேதி கரூர்​ செல்​வ​திலோ அல்லது நிகழ்​ச்​சிகளிலோ பங்​கேற்​க எந்​தத் தடை​யும்​ இல்​லை.

முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற அனுமதி: திமுகவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்
முதல் முறையாக வீடு, நிலம் வாங்குவோருக்கு ஆக.17 முதல் இணைய வழி பத்திரப் பதிவு சேவை அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in