அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை - காங். கோரிக்கை

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை - காங். கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் நன்​கொடை விவ​காரம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தின் கண்​காணிப்​பில் நீதி விசாரணை நடத்​தப்​பட​வேண்​டும் என்று காங்​கிரஸ் கோரிக்கை விடுத்துள்​ளது.

உத்​தரபிரதேச மாநிலத்​தில் அமைந்​துள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்​தர்​கள் அளிக்​கும் நன்​கொடை, காணிக்கை பணம் திருடப்​படு​வ​தாக புகார்​கள் எழுந்​தன. சுமார் ரூ.200 கோடி வரை மோசடி செய்​யப்​பட்​டிருப்​ப​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இது தொடர்க விசா​ரிக்க கடந்த ஜூன் 15-ம் தேதி சிறப்பு விசா​ரணைக் குழு நியமிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்​கட்​டளை​யின் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராய், அறங்​காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்​கள் பதவி​களை ராஜி​னாமா செய்​தனர். இந்த வழக்​கில் இது​வரை 8 பேரை போலீ​ஸார் கைது செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

நன்​கொடை கையாடல் விவ​காரம் வெளிச்​சத்​துக்கு வந்த பிறகு, அயோத்தி ராமர் கோயி​லில் பாது​காப்பு கெடு​பிடிகள் அதிகரிக்கப்​பட்​டுள்​ளன. அங்கு பணிபுரி​யும் ஊழியர்​கள் பலமுறை சோதனைக்கு உட்​படுத்​தப்​படு​கின்​றனர். செல்​போன் கொண்டு வர தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் அஜய் உபாத்​யாய் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நம்​பிக்கை என்ற பெயரில் அயோத்தி ராமர் கோயி​லில் கொள்ளை நடந்​துள்​ளது. இப்​பிரச்​சனை நிதி சார்ந்​த​தாக மட்​டுமல்​லாமல், பக்​தர்​களின் உணர்​வு​களோடு தொடர்​புடையது.

ஸ்ரீ ராமரின் பெயரில் திரட்​டப்​பட்ட நிதி​யானது பாஜக - ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின​ரால் அரசி​யல் ரீதி​யான கொள்​ளைக்கு ஒரு வழி​யாக மாறி​யுள்​ளது. இது வெறும் நிதி மோசடி மட்​டுமல்ல, கோடிக்​கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்கை மற்​றும் உணர்​வு​களுக்கு இழைக்​கப்​பட்ட பெரும் துரோகம். பிரதமரின் மேற்​பார்​வை​யில் கோயில் விவ​காரங்​களைக் கண்​காணிக்க ஒரு அறக்​கட்​டளை உரு​வாக்​கப்​பட்​டது. இப்​போது இந்த மோசடிக் குற்​றச்​சாட்​டுக்கு யார் பொறுப்​பேற்​பார்​கள்?

இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றக் கண்​காணிப்​பில் நீதி வி​சா​ரணை நடத்​த வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரம்: உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை - காங். கோரிக்கை
எத்தனால் தயாரிப்பு என்ற பெயரில் ம.பி.யில் ரூ.1,200 கோடிக்கு அரிசி ஊழல்: கார்கே குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in