கருத்துக் கணிப்பின்போது அச்சத்தால் மவுனமாகும் மேற்குவங்க மக்கள்: ஆக்சிஸ் நிறுவன தலைவர் தகவல்

ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா

ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா

Updated on
1 min read

கொல்கத்தா: கருத்​துக் கணிப்​பின்​போது அச்சத்தால் மக்​கள் பதில் அளிக்க மறுக்​கிறார்​கள் என்று ஆக்​சிஸ் மை இண்​டியா நிறுவன தலை​வர் பிரதீப் குப்தா தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் முதல்​கட்ட தேர்​தவின்போது, வாக்​களித்த மக்​களிடம் ஆக்​சிஸ் மை இண்​டியா நிறுவன பிர​தி​நி​தி​கள் கருத்​துகளைக் கேட்​டனர். ஆனால் பெரும்​பாலானோர் பதில் அளிக்க மறுத்​து​விட்​டனர். இதுகுறித்து அந்த நிறு​வனத்​தின் தலை​வர் பிரதீப் குப்தா கூறிய​தாவது: தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக் கணிப்​பின்​போது யாருக்கு வாக்​களித்​தீர்​கள் என்று மக்​களிடம் கேள்வி எழுப்​புவோம்.

நாட்​டின் பல்​வேறு மாநிலங்​களில் சுமார் 90% பேர் யாருக்கு வாக்​களித்​தோம் என்ற விவரத்தை பகிரங்​க​மாக தெரி​விப்​பார்​கள். பத்து சதவீதம் பேர் மட்​டுமே மவுனம் காப்​பார்​கள். குஜ​ராத்​தில் இந்த சதவீதம் சற்று அதி​கம். அந்த மாநிலத்​தில் சுமார் 20% பேர் பதில் அளிக்க மாட்​டார்​கள். வடகிழக்கு மாநிலங்​களில் சுமார் 15% பேர் மவுனம் காப்​பார்​கள்.

ஆனால் மேற்​கு​வங்​கத்​தின் நிலைமை முற்​றி​லும் மாறு​பட்​டது. இங்கு தேர்​தல் சார்ந்த கருத்​துக் கணிப்​பு​களை நடத்​து​வது மிக​வும் கடினம். கடந்த 23-ம் தேதி முதல்​கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. அப்​போது யாருக்கு வாக்​களித்​தீர்​கள் என்று பொது​மக்​களிடம் கேள்வி எழுப்​பினோம். 10 பேரில் 2 மட்​டுமே பதில் அளித்​தனர். அச்ச உணர்வு காரண​மாக 8 பேர் மவுனம் காத்​தனர்.

வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி மேற்​கு​வங்க மக்​களிடம் பெரும் அச்​சத்தை விதைத்​திருக்​கிறது. ஏதாவது ஒரு கட்​சிக்கு வாக்​களித்​தோம் என்று கூறி​னால் தங்​கள் பெயர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படலாம் என்று அவர்​கள் அஞ்​சுகின்​றனர்.

மிகுந்த சிரமங்​களுக்கு இடையே முதல் கட்ட தேர்​தலில் கருத்​துக் கணிப்பை நடத்தி உள்​ளோம். இரண்​டாம் கட்ட தேர்​தலின்போதும் கருத்​துக் கணிப்பை நடத்​து​வோம். அன்று மாலை மேற்​கு​வங்​கம் உட்பட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பான எங்​களது கருத்​துக் கணிப்பு முடிவு​கள் வெளி​யாகும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>ஆக்சிஸ் மை இண்டியா நிறுவன தலைவர் பிரதீப் குப்தா</p></div>
மே. வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in