மே. வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

மே. வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
Updated on
1 min read

கொல்கத்தா: பொது விநி​யோகத் திட்ட ஊழல் வழக்​கில் மேற்கு வங்​கத்​தில் 9 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று சோதனை நடத்​தி​யது.

மேற்கு வங்​கத்​தில் நலத்​திட்​டங்​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட பொது விநி​யோகத் திட்ட கோது​மை, பெரிய அளவில் திசை திருப்​பப்​பட்​ட​தாக, கோஜதங்கா சுங்​கத் துறை துணை ஆணை​யர் புகார் அளித்​திருந்​தார். அதன் அடிப்​படை​யில், பசீர்​ஹட் காவல் நிலை​யத்​தில் கடந்த 2020, அக்​டோபர் 23-ம் தேதி எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டது.

இதன் அடிப்​படை​யில் தொடங்​கப்​பட்ட விசா​ரணை​யைத் தொடர்ந்​து, அமலாக்​கத் துறை​யின் கொல்​கத்தா மண்டல அலு​வல​கம் இந்த சோதனையை நடத்​தி​யது. சட்​ட​விரோதப் பணப் பரி​மாற்ற தடை சட்​டத்​தின் கீழ் கொல்​கத்​தா, பர்த்​வான், ஹாப்ரா ஆகிய நகரங்​களில் உள்ள 9 இடங்​களில் நேற்று அதி​காலை முதல் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் திடீர் சோதனை நடத்​தினர்.

வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்​டுள்ள நிரஞ்​சன் சந்​திர சாகா மற்​றும் பிறருடன் தொடர்​புடைய சப்​ளை​யர்​கள் மற்​றும் ஏற்​றும​தி​யாளர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் இந்த சோதனை ஒரே நேரத்​தில் நடை​பெற்​றது.

இந்த முறை​கேடு தொடர்​பாக அமலாக்​கத் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பொது விநி​யோகத் திட்ட கோது​மை​யைத் திசை திருப்ப குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் ஒரு முறை​யான வழி​முறையை கையாண்​டுள்​ளனர். சப்​ளை​யர்​கள், உரிமம் பெற்ற விநி​யோகஸ்​தர்​கள், டீலர்​கள் மற்​றும் இடைத்​தரகர்​களு​டன் கூட்டு சேர்ந்​து, அங்​கீகரிக்​கப்​ப​டாத வழிகள் மூலம் குறைந்த விலை​யில் கோதுமை கொள்​முதல் செய்​யப்​பட்​டது. பிறகு விநி​யோகச் சங்​கி​லி​யில் இருந்து பெரிய அளவி​லான கோதுமை திசை திருப்​பப்​பட்​டு, பல இடங்​களில் சேகரிக்​கப்​பட்​டது.

அங்கு இந்​திய உணவுக் கழகம் (எப்​சிஐ) மற்​றும் மாநில அரசு முத்​திரைகள் கொண்ட கோணிப் பைகள் அகற்​றப்​பட்​டு, புதிய கோணிப் பைகளில் கோதுமை நிரப்​பப்​பட்​டுள்​ளது. பிறகு அந்த கோதுமை சந்தை விற்​பனைக்​கும் ஏற்​றும​திக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் குற்​றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் முறையற்ற ஆதா​யம் அடைந்​துள்​ளனர். குற்​றச் செயல் மூலம் வரு​மானம் ஈட்​டி​யுள்​ளனர். இந்த சோதனை​யின் போது முக்​கிய ஆவணங்​கள் உட்பட பல ஆதா​ரங்​கள் திரட்​டப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

மேற்கு வங்​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் முதல் கட்ட வாக்​குப் பதிவு கடந்த 23-ம் தேதி முடிந்​தது. இரண்​டாவது மற்​றும் கடைசி கட்ட தேர்​தல் ஏப்​.29-ம் தேதி நடை​பெறுகிறது. முதல்​வர் மம்தா பானர்​ஜி, ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ் மீது பாஜக தலை​வர்​கள் பல ஊழல் குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து தேர்​தல் பிரச்​சா​ரம் செய்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், 9 இடங்​களில் அமலாக்​கத்​ துறை சோதனை நடத்​தி​யது பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி உள்​ளது.

மே. வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில் 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
அசாம் மாநிலத்தில் சதம்; மே. வங்கத்தில் இரட்டை சதம்: ஹிமந்த சர்மா நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in